விவகாரத்திற்கு பின் 2 குழந்தைகளுக்கு தாயாகும் நடிகை சமந்தா.! இறுதி வாழ்க்கை இவர்களுடன் தான்..

Actress Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா தனது விவாகரத்திற்கு பிறகு சொந்த வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து வருவதனால் தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதாவது நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இருவரும் திருமண பந்தத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் சில வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் சமந்தா சில சர்ச்சைகளில் சிக்கினாலும் பட வாய்ப்புகள் குவிந்தது. இந்த சூழலில் மயோடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டார்.

தற்பொழுது இதற்காக பூடான் சென்று ஆயுர்வேத மருத்துவத்தை மேற்கொண்டு வருகிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் குஷி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் தான் ஒப்பந்தமாகி இருந்த படங்களில் இருந்து விலகி உள்ளார். இவ்வாறு சமந்தா உடலில் பிரச்சனைகள் இருந்தாலும் சோசியல் மீடியாவில் ரசிகர்களுக்கு எப்பவும் தான் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவ்வாறு சினிமா மட்டுமல்லாமல் பல தொழில்களிலும் ஆர்வம் காட்டி வரும் சமந்தா நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஆதரவாகவும் உதவிக்கரம் ஈட்டி வருகிறார். நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு பிறகு மறுமணம் செய்து கொள்ளவில்லை தனது குடும்பத்தினர்களுடன் வாழ்ந்து வந்தார். பலரும் மறுமணம் குறித்து கேட்டதால் இதற்கு மேல் எனது வாழ்க்கையில் மறுமணம் கிடையாது என பகிங்கரமாக அறிவித்தார்.

இந்நிலையில் சமந்தா தற்போது இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க போவதாகவும் அவர்களுடன் தான் இதற்கு மேல் தனது மீதி வாழ்க்கையை வாழப்போவதாக தெரிவித்துள்ளாராம். விரைவில் இது குறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.