வெளியேறியவுடன் அவருடைய வீட்டிற்கு சென்று விடுவேன்.. பூர்ணிமாவின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் மாயா ஓரினச்சேர்க்கையை சேர்ந்தவர் என சுசித்ரா பேட்டியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மாயா இருக்கும் போட்டியாளர்களில் மிகவும் வித்தியாசமானவராக இருக்கிறார் எனவும் இவருடைய நடவடிக்கை சரியில்லை என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா மாயா இருவரும் ஓரினச்சேர்க்கையில் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் மாயா தன்னுடைய பேச்சியினால் பூர்ணிமாவை மயக்கி இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு இந்த சூழலில் பூர்ணிமா விஷ்ணுவுடன் அதிகம் பேசுவதை தொடங்கினார்.

அஜித்,விஜய், சூர்யாவுக்கு வெறி அதிகம்.. பிளான் பண்ணி இந்த இடத்துக்கு வந்திருக்காங்க.. பிரபல இயக்குனர் பேச்சு.!

இதனால் மாயா பூர்ணிமாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது மேலும் மாயாவிற்கு பூர்ணிமா விஷ்ணுவிடம் பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை என்பதும் தெரிந்தது. இந்த வார கேப்டனாக விஷ்ணு இருந்து வரும் நிலையில் விஷ்ணு தன்னை தான் முதலில் டார்கெட் செய்வதாக மாயாவிடம் கூறி பூர்ணிமா அழுதுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் நேரடியாக மாயவோட வீட்டுக்கு சென்று அவருடன் தங்கி விடுவேன் அது சின்ன வீடு தான் ஆனால் சூப்பராக இருக்கும் என பூர்ணிமா நிக்சனுடன் பேசியதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

புயல் நிவாரண உதவிக்காக அஜித் எவ்வளவு கொடுத்தார் தெரியுமா? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்..

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல டிராமா காதலை பார்த்து இருக்கிறோம் ஆனால் யாரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பேசிக்கொள்வது கிடையாது. அப்படி இந்த கடந்த ஆறு சீசன்களின் அமீர்-பாவனி மட்டுமே தற்பொழுது வரையிலும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களை அடுத்து ஓரினச் சேர்க்கையாளர்களாக மாயா-பூர்ணிமா சுற்றி வருவார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவுள்ளனர்.