நடிகை பூமிகா ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் பஞ்சாபி என பல மொழிகளிலும் நடித்து வந்தவர். இவர் முதன்முதலில் 2000 ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் 2001 ஆம் ஆண்டு பத்ரி என்ற திரைப்படத்தில் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன்பிறகு ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் ரோஜா கூட்டத்தின் மூலம் குடியேறினார்.
ரோஜா கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து வந்தார் பின்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சில்லுன்னு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.
சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு மீண்டும் தெலுங்கு மலையாளம் என பலமொழி திரைப்படத்திலும் நடித்து வந்த பூமிகா 2007 ஆம் ஆண்டு பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் பூமிகாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
தற்பொழுது மிகவும் சந்தோஷமாக தனது குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூமிக்கு அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபகாலமாக பூமிகா தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படிதான் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் 42 வயதை கடந்தும் இப்படி ஒரு உடை தேவையா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.