சந்தேக பேயாய் மாறிய ஜெனி!! கடுப்பாகும் கோபி..

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் செழியன் ஆபீஸில் இருந்து வந்ததும் குழந்தையை பார்ப்பதற்காக கையை கழுவிக்கொண்டு பார்க்க வருகிறார். உடனே ஜெனி செழியன் போனை வாங்கி செக் பண்ணுகிறார். ஏன் போன் பண்ணும் போது எடுக்கல என கேட்கிறார். உடனே செழியன் நான் பிஸியா இருந்தேன் அதனால தான் என போனை காட்டுகிறார்.

உடனே அதனைத் தொடர்ந்து அனைவரும்  சாப்பிட உட்காருகின்றனர். அப்போது பாக்யா வகை வகையாக சமைத்து வைத்திருக்கிறார். சப்பாத்தி சிக்கன் குழம்பு, சிக்கன் 65, மற்றும் ஸ்வீட் என சமைத்து வைத்திருக்கிறார். அனைவரும் சாப்பிடும்போது ஆஹா ஓஹோ என பாராட்டிக்கொண்டே சாப்பிடுகின்றார்.

தமிழ் நமச்சியின் சதித்திட்டத்தை கண்டுபிடித்த பரமு.. அர்ஜுன் மீது சொத்தை எழுதி வைக்கப் போகும் ராகினி…

இதைப் ஹாலில் உட்கார்ந்து  பார்த்துக் கொண்டிருக்கும் கோபி அய்யோ எனக்கு பிடிச்ச சிக்கனா  எல்லாம் நல்லா சாப்பிடுறாங்களே என பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சாப்பிட தோணுகிறது ஆனால் வேறு வழி இல்லாமல் அங்கே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். தாத்தாவோ சாப்பிட்டு வெறி ஏத்துகிறார். பசியுடன் உட்கார்ந்திருக்கும் கோபிக்கு ராதிகா சாப்பிட ஓட்ஸ் மசாலா எடுத்துட்டு வருகிறார். கோபியோ மசாலா வாசம் வருது ஏதோ ஒன்னு செஞ்சு எடுத்துட்டு வந்துருக்கா என சந்தோஷப்படுகிறார். ஆனால் ஓட்ஸ் கஞ்சி என தெரிந்ததும்  கடுப்பாகிறார்.

ஆனால் இனியாவோ சிக்கன்  லெக் பீஸ், சிக்கன் 65,சப்பாத்தி என வெளுத்து கட்டுகிறார். ஆமாம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல் இவ்வளவு செஞ்சி இருக்கீங்க என கேட்க ஜெனிக்கு சமைத்து கொடுத்து ரொம்ப நாள் ஆகுதுல்ல அதுக்காக தான் என பாக்யா சொல்கிறார். உடனே பாட்டி நல்லா சமைத்து போடு அப்பயாவது அவளுக்கு கொஞ்சம் சதை விழட்டும் என சொல்கிறார்.

பத்ரகாளியாக மாறிய விஜயா.. திருட்டு முழி முழிக்கும் ரோகிணி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்..

அதைத் தொடர்ந்து நைட்டு  தூங்காமல் ஜெனி பாதி நேரத்தில் செழியன் போனை நோண்டிக் கொண்டிருக்கிறார். அப்போது எழுந்த செழியன் என்ன ஜெனி தூங்காம போன் பாத்துட்டு இருக்க என கேட்க இது யார் நம்பர் ஏன் ஓகே டியர்னு மெசேஜ் பண்ணி இருக்க என கேட்கிறார். அதற்கு அவர் என்னோட ஃப்ரெண்ட் விஷ்ணு என சொல்கிறார். அவருக்கு போன் போடு என சொல்ல இந்த நேரத்துல அவன் குழந்தையை பார்த்துட்டு இப்பதான் தூங்கி இருப்பான் காலையில பேசிக்கலாம் என சொல்லிவிட்டு தூங்குகிறார்.

மேலும் காலைல எழுந்த உடனே செழியன் கிட்ட போன கொடுத்து விஷ்ணுவுக்கு போன் பண்ண சொல்லி பேச சொல்கிறார். அவரும் போனை அட்டென்ட் பண்ணி பேசுகிறார். அப்போது தான் அவருடைய சந்தேகம் தீர்க்கிறது. சரி செழியா  எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்குறேன் குழந்தையை பார்த்துக்கோ என சொல்லிவிட்டு தூங்குகிறார். அத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது.