நிலாவை பார்க்க வீட்டிற்கே வந்த கணேஷ்.. கோபியை மலை போல் நம்பும் பாக்கியா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode October 31 : இன்றைய எபிசோடில் கோவிலில் அன்னதானத்திற்கு பாக்கியா செல்வி எல்லோரும் சேர்ந்து கேட்டரிங் ஆர்டர் எடுத்து சமைத்திருந்தனர் அந்த சாப்பாடு அருமையாக இருந்தது என்று சொல்லிவிட்டு கோவில் தர்மகர்த்தா பாக்கியா வேலைக்கான சம்பளத்தை கொடுக்கின்றனர் அப்பொழுது பழனிச்சாமி அங்கு வருகிறார்.

அவரைப் பார்த்த செல்வி அண்ணா என கூப்பிட பிறகு பழனிச்சாமி அங்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்ன இங்க என பாக்யாவிடம் பழனிச்சாமி கேட்க இந்த கோவில் அன்னதானத்திற்கு நாங்க தான் சமைச்சோம் என பாக்கியா சொல்கிறார் அப்பொழுது கோவில் தர்மகர்த்தா பழனிச்சாமியிடம் நீங்க சொல்லும் போது கூட நான் இந்த அளவுக்கு சாப்பாடு அருமையாக இருக்கும் என்று நினைக்கல சார் என்று சொல்ல..

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா.! தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்..

பாக்கியா அப்ப நீங்க சொல்லித்தான் இவங்க எங்கள கூப்பிட்டாங்களா என கேட்கிறார். உடனே பழனிச்சாமி சரி அதெல்லாம் விடுங்க எனக்கு பசிக்குது சாப்பாடு போடுங்க என்று கேட்கிறார்.. பிறகு பாக்கியா பழனிச்சாமியிடம் செழியனை மாலினி என்கின்ற பெண் மிரட்டிக்கொண்டு இருப்பதாக என்கிட்ட சொல்றான், ஆனா நான் எந்த தப்பும் பண்ணல..

அப்படின்னு செழியன் சொல்றான் அப்புறம் ஏன் அந்த பொண்ணு அவன மிரட்டணும் என பழனிச்சாமி இடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.. அடுத்து பாக்கியா கோபி எல்லோரும் வீட்டில் இருக்கும்பொழுது கணேஷ் வீட்டிற்கு வருகிறார். கோபி கணேஷை பார்த்ததும் யார் என்று கேட்க இனியாவோட அப்பா என சொல்வதும் ஓ எழிலோட பிரண்டா நீ, எழில பாக்க வந்திருக்கியா என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ரஜினிக்கு ரவுடிசம் தான்.. லீயோவுக்கும், இதுக்கும் சம்பந்தமே இல்லை.! தாறுமாறாக உருவாகும் தலைவர் 171 – லோகேஷ் ஓபன் டாக்

அப்பொழுது பாக்கியா வெளியே வந்து கணேஷை பார்த்ததும் ஷாக் ஆகிறார் பிறகு எழில் வீட்ல இல்ல நீ கிளம்பு அவன் வந்தான் நான் போன் பண்ண சொல்கிறேன் என கணேஷை வேகவேகமாக பாக்யா வீட்டை விட்டு அனுப்பி வைத்துள்ளார் பிறகு கோபி எழிலோட ஃப்ரெண்ட் தானா எதுக்கு அவன இப்படி வெளிய அனுப்புற என கேட்க அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாதுங்க என்று சொல்லிவிட்டு..

பிறகு கோபி இடம் உங்க கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும் அதை வீட்டில் பேச முடியாது தனியா தான் பேசணும் காலையில வாக்கிங் போகும்போது அங்க சொல்றேன் என சொல்கிறார் கோபியும் சரி என்று சொல்கிறார் இதை பார்த்த ராதிகா என்ன பாக்கியா உன்கிட்ட பேசிகிட்டு இருந்தாங்க என கோபி கிட்ட கேட்க ஏதோ முக்கியமான விஷயம் என்னிடம் சொல்லனுமா என கோபி ராதிகாவிடம் சொல்லிவிட்டார்.

அடுத்து பாக்கியா கணேஷ் உடைய அம்மாவுக்கு போன் பண்ணி உங்க பையன் இன்னைக்கு வீட்டுக்கு வந்து இருந்தாரு, நான் உங்ககிட்டையும் உங்க பையன் கிட்டயும் பேசணும் நான் வீட்டுக்கு வரேன் என்று சொல்கிறார்.. அடுத்து ராதிகா பாக்யாவிடம் என்கிட்ட எல்லாம் பேச உங்களுக்கு டைம் இருக்காது ஆனா உங்க எக்ஸ் ஹஸ்பண்ட் கோபி கிட்ட மட்டும் ஏதோ பேசிகிட்டு இருந்தீங்க என்ன என்கிட்ட சொல்லுங்க என்று கேட்க அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது.

எங்க பசங்க சம்பந்தப்பட்ட விஷயம் என்று சொல்ல நீங்க தான் உங்க பையன் விஷயத்துல தனியா முடிவு எடுக்குற ஆளாச்சே இப்ப என்ன கோபியோட ஹெல்ப் கேக்குறீங்க என்று பாக்கியாவை விடாமல் ராதிகா கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு பாக்கியா உங்க கிட்ட பேச எனக்கு டைம் இல்லை என்று அவாய்ட் பண்ணுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..