Baakiyalakshmi today episode : அடப்பாவிங்களா, பாக்கியாவுக்கும் ஒரு மனசு இருக்குடா அதை புரிஞ்சிக்கவே மாட்டீங்களா.! ஈஸ்வரி ராமமூர்த்தி முடிவால் கண்கலங்கிய பாக்யா..

Baakiyalakshmi today episode October 28 : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ராதிகா கோபி போனதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ராதிகாவின் அம்மா அப்ப போக விட்டுட்டு இப்ப ஏன் வருத்தப்படுற என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அடுத்த காட்சியில் செழியன் ஆவேசமாக காரை எடுத்துக்கொண்டு மாலினி வீட்டிற்கு செல்கிறார், அங்கு போய் மாலினி இடம் வாக்குவாதம் செய்கிறார். அதற்கு மாலினி என்கிட்ட நீயும் நானும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ இருக்கு வீடியோ இருக்கு அதை எல்லாத்தையும் ஜெனிக்கு அனுப்புவேன் என மிரட்டுகிறார். அது மட்டும் இல்லாமல் ஜெனியின் அம்மாவுக்கும் அந்தப் போட்டோ வீடியோவை அனுப்புவேன் என மிரட்ட அதற்கு செழியன் நீ எங்க வேணாலும் எப்படி வேணாலும் அனுப்பிக்கோ இனிமே நான் உனக்கு பயப்பட போறது கிடையாது.

உன்னால முடிஞ்சத பாத்துக்கோ இதை சொல்ல தான் இங்க வந்தேன் என பேச அதற்கு மாலினி ஏன் செழியா என்ன புரிஞ்சுக்கவே மாட்டேங்குற எனக்கு அன்பை காட்ட வேற வழி தெரியல நீ எனக்கு வேணும் என பேச அதற்கு செழியன் இதுக்கு பேர்தான் அன்பா என்ன டார்ச்சர் பண்றதுக்கு பேரு தான் அன்பா அப்படிப்பட்ட அன்பு எனக்கு தேவையில்லை, நைட் ஃபுல்லா மெசேஜ் பண்ணி என்ன டார்ச்சர் பண்ற இதுக்கு மேல உன்கிட்ட பேச ஒன்னுமே கிடையாது இனிமே நீ எனக்கு தேவையே இல்ல என பேசுகிறார்.

நம்பர் 1 நான் தான் என நிரூபித்த விஜய்.. இரண்டாவது இடத்தில் ரஜினி.. மூன்றாவது இடத்தில் யார் தெரியுமா.?

இந்த போட்டோ எல்லாம் அனுப்புனா உன் நிலைமை என்ன ஆகும் தெரியுமா என மாலினி மிரட்ட அதற்கு முடிஞ்சா அனுப்பிக்கோடி நான் பார்த்துக்கிறேன். என் வைஃப் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும்  நான் ஏத்துக்கிறேன் என பேசுகிறார். அடுத்த காட்சியில் கோபி ஈஸ்வரி ராமமூர்த்தி அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது சாப்டியா கோபி சீக்கிரம் சாப்பிடு மாத்திரை போடணும் என ஈஸ்வரி கூறுகிறார்.

அந்த சமயத்தில் ராதிகா கோபிக்கு போன் பண்ணுகிறார் உடனே நான் வெளில போய் பேசிட்டு வரேன்னு என கூற ஏன் இங்கேயே பேசு என ஈஸ்வரி கூறுகிறார் ராதிகா போன் பண்ணியதும் அட்டென்ட் பண்ணி பேச முதலில் நலம் விசாரித்த ராதிகா பிறகு எங்களை பற்றி உனக்கு கவலையே கிடையாது உங்க அம்மா கூப்பிட்ட உடனே பின்னாடியே ஓடிட்டீங்களே என பேசுகிறார். அப்பொழுது போனை புடுங்கி ஈஸ்வரி அங்க இருந்தா தான் டார்ச்சர் பண்றன்னு இங்க அழைத்து கொண்டு வந்தா இங்கேயும் போன்ல டார்ச்சர் பண்றியா என திட்டுகிறார்.

இதனால் விபரீத முடிவை எடுத்த ராதிகா பொட்டி படுக்கையுடன் கோபி வீட்டிற்கு வருகிறார் இவரைப் பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள் அது மட்டும் இல்லாமல் கோபி எங்கே இருக்கிறாரோ அங்கதான் நான் இருப்பேன் இல்லன்னா கோபி என்னோட அனுப்பி வைங்க என பேசுகிறார். பாக்யாவின் மனசை யாருமே பிரிந்து புரிந்து கொள்ளாமல் அனைவரும் ஆளாளுக்கு பேசிக் கொள்கிறார்கள்.

அரும்பு மீசையே முளைக்கல.. ஆன்ட்ரியா முன்பு அனிருத் செய்த வேலையை பார்த்தீர்களா.!

உடனே எழில் வாமா ரெண்டு பேரையும் வெளியில கிளம்ப சொல்லுவோம் என பாக்கியாவை  கூப்பிடுகிறார்  ராமமூர்த்தி இப்பொழுது எதுவும் சொல்ல வேண்டாம் பாட்டிக்கு ஏதாவது ஆயிடும் கோபியிடம்  சண்டை பிடிச்சா எனக் கூறுகிறார். உடனே இப்ப எதுக்காக கத்துறீங்க அவன் உடம்பு சரியாகிவிட்டதும் போயிடுவான் என ஈஸ்வரி பேச அதற்கு பாக்கியா அவர் இருக்கிற இடத்தில் என்னால் இருக்க முடியாது என கூறுகிறார் உடனே பாக்கியா நான் கிளம்புகிறேன் என கூற நீ கிளம்பிட்டினா இவ்வளவு நாளா என்ன புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா என நினைத்துக் கொள்வேன் என ஈஸ்வரி சாதாரணமாக சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

ராமமூர்த்தியும் கொஞ்ச நாள் பொறுமையா இருமா எனக்காக என பாக்கியாவை பார்த்து கூறுகிறார் இப்படி பாக்கியா தலையில் அனைவரும் பாரத்தை இறக்கிறார்கள் ஆனால் பாக்கியாவுக்கு ஒரு மனசு இருப்பதை யாருமே யோசிக்கவில்லை பாக்கியா கண்கலங்கி நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.