என் மகனா இருந்தாலும் என்னுடைய முழு சப்போர்ட் ஜெனிக்கு தான்.. பாக்கியாவை சுற்றி வளைக்கும் பிரச்சனை – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode november 13 : இன்றைய எபிசோடில் ஈஸ்வரியும், பாக்யாவும் ஜெனி வீட்டிற்கு சமாதானம் பேச போய் உள்ளனர் அங்கு ஜெனி உடைய அம்மா இங்க எதுக்கு வந்தீங்க உங்கள எல்லாம் நம்பி தானே கல்யாணம் பண்ணி வச்ச என் பொண்ணோட வாழ்க்கையே போச்சு என்று சத்தம் போடுகிறார் பிறகு பாக்யா ஜெனி கிட்ட நடந்தது ஒன்னும் உன்கிட்ட சொல்ற விஷயம் இல்ல..

அதனால தான் மறைச்சேன் என்று சொல்ல ஜெனி இனிமேலும் நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்.. இப்ப எதுக்கு இங்க வந்தீங்க எதுவுமே நடக்காத மாதிரி, நான் இப்ப அங்க வந்து அந்த வீட்ல உங்க பையன் கூட வாழனுமா.. என்னோட நிலைமை உங்களுக்கும் வந்து இருக்கு உங்களை வேணான்னு சொன்னவங்கள நீங்க ஒதுக்கி தானே வச்சீங்க நான் மட்டும் உங்க பையன் கூட வந்து வாழணுமா..

சூப்பர் ஹிட் படங்களை மிஸ் செய்த 5 தமிழ் நடிகைகள்.. கிளாமருக்கு பயந்து அஜித் படத்தை தவறவிட்ட ஹீரோயின்

உங்களுக்கு வந்தா அது பிரச்சனை எனக்கு வந்தா சும்மாவா என்று கேட்க உடனே பாக்கியா அத்தை வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் என்று வீட்டிற்கு போய்விட்டார்.. வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி எனக்கு பாக்கியா மேல தான் கோவம் அங்க வந்து ஒண்ணுமே பேசாம நிற்கிறாய் என்று சொல்ல பாக்கியா நான் என்ன பேச முடியும் தப்பு எல்லாம் செழியன் மேல எப்படி ஜெனிய இந்த வீட்டுக்கு கூப்பிட முடியும்..

ஜெனி என்ன பார்த்து என் நிலைமையில் இனியா இருந்தா நீங்க இப்படித்தான் வந்து கூப்பிடுவீங்களா என்று கேட்கிறாள் இதுக்கு நான் என்ன பதில் சொல்றது நான் எப்பவும் ஜெனி பக்கம் தான் இருப்பேன் செழியன் என் பையன் என்றதால் அவனுக்கு சப்போர்ட் பண்ண முடியாது.. ஒரு நாளும் நான் ஜெனியை என் பையன் கூட வந்து வாழ் என்று சொல்ல மாட்டேன் என பாக்கியா சொல்கிறார்..

தீபாவளி அன்றும் ஏமாற்றம் தான்.. முதல் நாளை விட 3வது நாளில் குறைந்த ஜப்பான் வசூல்..

இன்னொரு பக்கம் கணேஷ் காலண்டரை பார்த்து அவங்க சொன்ன கெடுல அஞ்சு நாள் முடிஞ்சிடுச்சு இன்னும் 25 நாள் தான் இருக்கு அதுக்கு அப்புறம் அமிர்தாவுக்கும் நிலாவுக்கும் நான் உயிரோட இருக்கிற விஷயம் தெரிஞ்சு ஓடி வந்துருவாங்க என சந்தோஷப்பட்டு அவங்க அப்பா அம்மா விடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அடுத்து பாக்கியா செல்வியிடம் கேண்டினுக்கு லோன் வாங்கிருந்தோம்ல அதுக்கு டிவு பணம் கட்டணும் கைல பணம் ஒன்னும் இல்லை அதனால இந்த வலையல் வித்து குடு என்று பாக்கியா செல்வி கையில் வலையலை கொடுத்துவிட்டு நம்ம கூட வேலை செஞ்சவங்களுக்கும் பணம் தரணும் ஏதாவது பண்ணனும் என்று யோசிக்கிறார் இதோடு இந்த எபிசோடு முடிந்துள்ளது.