அமிர்தாவும், நிலாவும் என் கூட தான் இருப்பாங்க உன்னால முடிந்தத பாத்துக்கோ.. கணேஷிடம் நேருக்கு நேராக சவால் விடும் எழில் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode January 5 : இன்றைய எபிசோடில் ஜெனி செழியன் விவாகரத்துக்காக கோர்ட்டுக்கு வந்திருக்கின்றனர்.. அங்கே உட்கார்ந்து இருக்கும்பொழுது செழியன் ஜெனியை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஜெனி செழியனை கண்டு கொள்ளவில்லை.. பிறகு ஜெனி மற்றும் செழியனை கூப்பிடுகின்றனர். அப்பொழுது ஜெனி உடைய வக்கீல் முதலில் வாதாடுகிறார்.

ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி ஜெனி செழியனை பெற்றோர்களை எதிர்த்து விரும்பி தான் கல்யாணம் பண்ணிக் கொண்டார். ஆனால் பிறகு செழியன் மாலினி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்து உள்ளார் அதனால் ஜெனிக்கு ரொம்பவும் மனரீதியாக வருத்தத்தை கொடுத்துள்ளார் என்று சொல்வது உடனே ஈஸ்வரி ஏன் என்னோட பேரன் கஷ்டப்படலையா..

தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் விஜய்க்கு அண்ணியாக என்னால் நடிக்க முடியாது.! தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகை..

அது என்ன உன் பொண்ணுக்கு மட்டும் தான் கஷ்டமா செழியன் தப்பு பண்ணா தான் இல்லன்னு சொல்லல அதுக்காக விவாகரத்து தான் முடிவா என்று ஈஸ்வரி எழுந்து பேசும்போது ஜட்ஜ் நீங்க அமைதியா உட்காருங்க இல்லனா கண்டன்ட் ஆப் கோர்ட் என்று உங்க மேல கேஸ் போடுவோம் என்று சொல்வதையும் கேட்காமல் ஈஸ்வரி திரும்பத் திரும்ப எழுந்து பேசுவதால்..

பிறகு கோபி ஈஸ்வரியை வெளியே கூட்டிட்டு வந்து இப்படிலாம் பேசக்கூடாது செழியனுக்காக நம்ம வக்கீல் அடுத்து வாதாடுவார் அதுதான் முறை என்று சொல்லி ஈஸ்வரியை வெளியே உட்கார வைத்து விட்டு உள்ளே வருகிறார் பிறகு ஜார்ஜ் இந்த கேசை இன்னும் கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அடுத்து எழில் பைக்கில் போய்க் கொண்டிருக்கும் பொழுது கணேஷ் எழிலை வழிமறித்து நிற்கிறார்.

டேய் தம்பி வீடியோவா எடுக்கிற அத கொஞ்சம் குடு பாப்போம்.! டெலிட் செய்துவிட்டு மொபைலை கொடுத்த அஜித்..

அப்பொழுது நகருங்க நான் போகணும் என்று சொல்ல கணேஷ் ஹெல்மட்டை எடுத்துவிட்டு ஒரு நிமிஷம் உன்னோட வழியில் குறுக்க வந்ததுக்கு உனக்கு எப்படி இருக்கு என்னோட வாழ்க்கையிலையே நீ குறுக்க வந்துட்டியே எனக்கு எப்படி இருக்கும், அமிர்தாவை பத்தி என்ன முடிவு எடுத்து வச்சிருக்க என்று கேட்க, எழில் அமிர்தாவும் நிலாவும் என் கூட தான் இருப்பாங்க..

என்னை மீறி அவர்களை எப்படி கூட்டிட்டு போறேன்னு நான் பாக்குறேன், உன்னால முடிஞ்சத பாத்துக்கோ என்று சவால் விடுகிறார் பதிலுக்கு கணேஷும் நான் அமிர்தாவையும் நிலாவையும் என் கூட கூட்டிட்டு போய் காண்பிக்கிறேன் என்று சொல்கிறார். அடுத்து ஜெனி கோர்ட்டில் வெளியே தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு விக்கல் எடுக்கிறது.

அதைப் பார்த்து செழியன் பதறிப் போய் காரில் இருந்த தண்ணீர் எடுத்துட்டு வந்து ஜெனி பக்கத்தில் வைக்கிறார் ஜெனியும் அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடிக்கிறார் இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.