வீட்டுக்கு தெரியாமல் கிளாசை கட் அடித்து விட்டு இனியா பார்த்த வேலை.. பாக்கியாவுக்கு ஆதரவு கொடுத்த கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode January 1 : இன்றைய எபிசோடில் கணேஷ் வந்ததை நினைத்து அமிர்தா அழுது கொண்டிருக்கிறார். அப்பொழுது பாக்யா வருவதும் பாக்கியா தோளில் சாய்ந்து கொண்டு இந்த மாதிரி நடக்கும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல, என்னை மன்னிச்சிடுங்க எல்லாரும் உங்களை எல்லாரையும் நான் கவலப்பட வச்சுட்டேன், என்று சொல்ல..

அந்த நேரத்தில் ராதிகாவும் அங்கு வந்து இந்த மாதிரி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல அதனால உன் மேல தப்பு இல்ல நீ அழுது அழுது உன்னோட உடம்ப வீணாக்காத என்று அமிர்தாவுக்கு ஆறுதல் சொல்கிறார்.. பிறகு எழிலும் செழியனும் அவர்களது வாழ்க்கையை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். அப்பொழுது ஈஸ்வரி செழியன் கையை பிடித்து வருத்தப்படாதடா என்று சொல்ல செழியன் எழிலோட நிலைமையை நினைத்து பார்க்கும் போது என்னோட பிரச்சினை எல்லாம் ஒரு விஷயமே இல்ல என்று சொல்ல..

டைட்டானிக் காதலே தோத்துடும் போல.. ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா செய்யும் அலப்பறை..

பிறகு ஈஸ்வரி எழிலுக்கு ஆறுதல் சொல்கிறார்.. மேலும் கோபியும் எழிலிடம் எவனோ ஒருத்தன் வந்து கத்திட்டு போனா அது இருக்கட்டும் ஆனால் நீயும் அமிர்தாவும் சேர்ந்து என்ன முடிவு எடுக்குறீங்களோ அதுக்கு தான் நாங்க எல்லோரும் சப்போர்ட் பண்ணுவோம் என்று சொல்கிறார். அடுத்த இனியா ஜெனி வீட்டுக்கு போய் அக்கா உங்கள பாக்கணும் போல இருந்தது.

அதான் கிளாஸ கட் அடிச்சிட்டு ஆட்டோ புடிச்சு வந்த, எப்படி இருக்கீங்க பாப்பா எப்படி இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு நீங்க அண்ணனை டிவோர்ஸ் பண்ண போறீங்களா, அண்ணா ரொம்ப பாவம் அக்கா உங்களை நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கு, நீங்க திரும்ப வீட்டுக்கு வாங்க நம்ம பழையபடி ஜாலியா இருக்கலாம் என்று சொல்ல ஜெனி அதெல்லாம் விடு உன்னோட காலேஜ் எப்படி போகுது என்று பேச்சை மாற்றுகிறார்.

பேச்சில மட்டும் நாகரீகம் இருந்தா போதாது, உடையிலும் நாகரீகம் தேவை.. ஸ்ருதியின் செயலால் தலை குனிந்த அண்ணாமலை – சிறகடிக்க ஆசை

பிறகு ஜெனி இனியாவை ஆட்டோ பிடித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் இனியா வீட்டுக்கு வந்ததும் பாக்கியா ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடுறியா இல்லனா சாப்பாடு சாப்பிடு என்று சொல்ல இனியா நான் இன்னைக்கு ஒன்னு பண்ணேன் என்று சொல்ல உடனே செல்வி இருக்கிற பிரச்சினை பத்தாம நீ வர ஒரு குண்ட தூக்கி போட்டுறாத பாப்பா, அக்காவால தாங்க முடியாது என்று சொல்கிறார்.

பிறகு பாக்கியா என்னன்னு சொல்லு என்று கேட்க நான் இன்னைக்கு ஜெனி அக்காவை போய் பார்த்தேன்.. என்று சொல்ல பாக்யா தனியாவா போன என கேட்க ஆமாம் அவங்கள பாக்கணும் போல இருந்தது அதான் தனியா போய் பாத்துட்டு வந்தேன், அக்கா என்கிட்ட நல்லா தான் பேசினாங்க நீங்க வேணா பாருங்க..

அக்கா நம்ம வீட்டுக்கு திரும்ப வந்துருவாங்க என்று சொல்கிறார்.. பிறகு செல்வி கணேஷ் வந்து பிரச்சனை பண்ணது எல்லாத்தையும் இனியாவிடம் சொல்வதும் பாக்கியா இனியாவை கட்டிபிடித்து கண் கலங்கி அழுகிறார். உடனே இனியா இப்ப அமிர்தா அக்கா எங்க இருக்காங்க நான் அவங்கள போய் பார்க்கிறேன் என்று சொல்கிறார். இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.