தாலி கட்டுன முதல் கணவருடன் போக மறுக்கும் அமீர்த்தா.. இன்னும் ஒரு வாரம் கெடு வைத்துவிட்டு கிளம்பிய கணேஷ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode december 30 : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கணேஷ் வீட்டிற்கு வந்து அமிர்தாவையும் நிலாவையும் என் கூட வாங்க நான் உங்களை நல்லா பாத்துப்பேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.. அப்பொழுது அமிர்தா நான் எங்கேயும் வரமாட்டேன் இங்கதான் இருப்பேன் என்று பாக்கியலட்சுமியை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் எழிலும் தலையில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் பிறகு கோபி எழிலுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.. ஆனால் கணேஷ் பிடிவாதமாக அமிர்தா என் கூட வா நான் உன்ன நல்லா பாத்துப்பேன் என்று அமிர்தாவிடம் சொல்ல வரும்பொழுது பாக்கியா அவ தான் உன்ன பாத்தா பயப்படுறால போ என்று சொல்கிறார்.

அந்த மாதிரி மாத்திரை.. மயங்கி விழுந்த தொகுப்பாளனி.. கடவுள் போல் வந்து நடிகரின் மானத்தைக் காப்பாற்றிய நடிகை..

பிறகு கணேஷ் நிலாவை தூக்க வரும் பொழுது கோபி நிலா இந்த வீட்டு பொண்ணு அமிர்தாவும் எங்க மருமகள் ரெண்டு பேரும் இங்க தான் இருப்பாங்க, நீ செத்துப் போனதுக்கு அப்புறம் உன்னை மறந்துட்டு எழில கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு வருஷமா இவங்க சந்தோஷமா இருக்காங்க திடீர்னு நீ உயிரோட வந்தினா எப்படி உன் கூட வருவா..

அதெல்லாம் அமிர்தாவையும்  நிலாவையும் உன் கூட அனுப்பி வைக்க முடியாது போ என்று சொல்ல கணேஷ் என் பொண்டாட்டி புள்ளை என் கூட அனுப்பி வைக்கலைன்னா நான் போலீஸ கூப்பிடுவேன் என்று சொல்கிறார்.. உடனே கோபியும் போலீசை கூப்பிடு நான் பேசுகிறேன் என்று சொல்கிறார். பிறகு கணேஷ் உடைய அப்பா அம்மா என்னோட பையன் இடத்துல இருந்து பாருங்க..

Biggboss 7 : இந்த வாரம் குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா.?

மனசாட்சியே இல்லாம பேசுறீங்க என்று கேட்க கோபி மனசாட்சி இருக்கிறதால தான் இவ்வளவு பொறுமையா பேசிக்கிட்டு இருக்கோம், உன் பையனுக்கு புத்திமதி சொல்லி அவனை அழைச்சிட்டு போங்க என்று கோபி சொல்கிறார்..  கடைசியாக ராமமூர்த்தி கணேசிடம் நீ வா வான்னு கூப்பிட்டு இருக்க நீ வந்த அதிர்ச்சில அவ இருக்கா அதிலிருந்து மீண்டு வரவே எவ்வளவு நாள் ஆகும்னு தெரியல என்று கேட்க கணேஷ் கரெக்ட்..

நான் வந்த அதிர்ச்சியில் தான் அமிர்தா இருக்கா கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் சரியாயிடும் அப்புறம் என் கூட வருவா அதனால நான் இப்ப போறேன், ஒரு வாரம் கழிச்சு திரும்ப வந்து அமிர்தாவையும் நிலாவையும் நான் கூட்டிட்டு போவேன் அதுக்குள்ள அவ மனசு மாதிரி இருப்பா என்று சொல்லிவிடுங்கள் கிளம்புகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..