அமிர்தா வா உன்ன நல்லா பாத்துக்குறேன் அழைக்கும் கணேஷ்.. பதட்டத்தில் பாக்கியா குடும்பம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode december 29 : இன்றைய எபிசோடில் அமிர்தா உடைய அம்மா பாக்கியா வீட்டிற்கு வந்து என் பொண்ணு எங்க, கணேஷ் வீட்டிற்கு வந்தானா, அமிர்தாவை வெளியே அனுப்பிட்டீங்களா அவ பாவம் என்று அழுது கொண்டிருக்கிறார்.. பிறகு பாக்கியலட்சுமி கணேஷ் இங்க வரல அமிர்தாவும் எழிலும் கோவிலுக்கு போய் இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அமிர்தாவும் எழிலும் வீட்டிற்கு வருகின்றனர். உள்ளே வந்த அமிர்தா அவங்க அம்மாவை பார்த்து கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார் பிறகு எழில் பாக்கியாவிடம் நாங்கள் கணேஷ பார்த்தோம் என்று சொல்கிறார்.. பின்னாடியே கணேஷும் அவங்க அப்பா அம்மாவும் வீட்டிற்கு வருகின்றனர்..

முரட்டு வில்லனாக நடித்த விஜயகாந்தின் 5 திரைப்படங்கள்..! மார்க்கெட்டை காலி செய்ய தான் இப்படி ஒரு திட்டமா..

அப்பொழுது அமிர்தா உடைய அம்மா இங்க எதுக்கு வந்த நான் எத்தனை தடவை உன்கிட்ட வந்து என் பொண்ண தொந்தரவு பண்ணாதன்னு கெஞ்சி இருக்கேன், நீ பாட்டுக்கு செத்து போயிடுவ அதுக்கு அவ அழணும் திரும்பி வந்தா சந்தோஷப்படனுமா அவ என்ன பொம்மையா.. அவளுக்குன்னு மாமனார் மாமியார் தாத்தா பாட்டின்னு குடும்மா சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கா..

அவள விட்டுடு என்று கணேஷிடம் சொல்கிறார்.. பிறகு அமிர்தாவோட அம்மா எழிலிடமும் என் பொண்ண வீட்டை விட்டு அனுப்பிடாத அவ எந்த தப்பும் பண்ணல என்று கெஞ்சுகிறார் இன்னொரு பக்கம் கணேஷ் உடைய அம்மாவும் எழிலுடைய கையைப் பிடித்துக் கொண்டு கணேஷ் நிலைமையில் இருந்து பாரு திடீர்னு திரும்ப வந்து அவன் பொண்டாட்டி புள்ளைய கேட்கிறான் என்ன பண்றது என்று சொல்கிறார்.

போலீசாக மிரட்டி விட்ட விஜயகாந்த்.. எத்தனை திரைப்படத்தில் போலீஸ் கெட்டப் தெரியுமா..?

பிறகு கணேஷ் இப்ப எதுக்கு தேவையில்லாம எல்லோரும் பேசிகிட்டு இருக்கீங்க நான் என் அமிர்தா கிட்ட பேசுறேன் என்று அமிர்தா கிட்ட வரும்பொழுது  அமிர்தா எழில் கையைப் பிடித்துக் கொள்கிறார்.. அப்பொழுதும் கணேஷ் எழிலை கையெடுறா என் பொண்டாட்டி மேல என் கை வைக்கிற என்று சத்தம் போடுகிறார் அதற்கு செழியன் அவனோட பொண்டாட்டி கைய அவன் புடிச்சி இருக்கான் நீ யாரு என்று கணேச திட்டுகிறார்..

இன்னொரு பக்கம் ஈஸ்வரி என்னோட பேரன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு இப்ப என்ன பண்றது என்று அழுகிறார் உடனே அமிர்தா பாட்டி என்ன மன்னிச்சிடுங்க இந்த மாதிரி எல்லாம் நடக்கும்னு எனக்கு சத்தியமா தெரியாது என்று அழுகிறார் பிறகு கணேஷ் அமிர்தாவையும் நான் உன்ன நல்லா பாத்துப்பேன் என்கூட வா என்று கூப்பிடுகிறார் ஆனால் அமிர்தா போக மறுக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..