இன்னும் 12 நாள் தான் இருக்கு.. பாக்கியாவை வான் பண்ணிட்டு போன முகமூடி அணிந்த நபர் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode december 02 : இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரண்டில் பழனிச்சாமியை மீட் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.. அப்பொழுது நேற்று நடந்ததற்கு ரொம்ப சாரி சார் எனக்கு ஆறுதல் சொல்றதுக்காக எங்க வீட்டுக்கு வந்தீங்க, ஆனா அந்த கோபி உங்களை ரொம்ப தப்பா பேசிட்டாரு என்று மன்னிப்பு கேட்க.. பழனிச்சாமி என்னோட தப்பு தான் சொல்லாம கொள்ளாம நம்ம அடிக்கடி மீட் பண்ணி பேசுறது தப்பு..

இனிமே இந்த மாதிரி நடக்காது அன்பா இருந்தாலும் அளந்து தான் கொடுக்கணும் என்று சொல்ல பாக்கியா என்ன சார் எப்படி எல்லாம் பேசுறீங்க உங்கள மாதிரி ஆளுங்க என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் தான் நான் தைரியமா எல்லாத்தையும் பண்றேன் நீங்க என்கிட்ட பேசாம எல்லாம் இருக்கக் கூடாது சார் என்று சொல்கிறார்.. அடுத்து பாக்கியா ஸ்கூட்டியில் ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் பொழுது மாஸ்க் போட்ட ஒரு நபர் பாக்யாவை வழிமறித்து இறங்கி கிட்ட வருகிறார் பாக்யா உடனே பதறி போகிறார் பிறகு அவர் முகமூடியை கழட்டி விட்டு என்னை யாருன்னு தெரியுதா..

கேப்டன் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றமா.? மருத்துவர்கள் கொடுத்த விளக்கம்

நான் தான் கணேஷ் நீங்க சொன்ன ஒரு மாசத்துல 18 நாள் முடிஞ்சிடுச்சு இன்னும் 12 நாள் தான் இருக்கு அத சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.. அடுத்து பாக்யா பொருட்காட்சி காண்ட்ராக்ட் எடுத்த ஆபீசுக்கு சென்று உள்ளார். பாக்யா போல் அங்கு பல பேர் வந்து பொருட்காட்சியை நம்பி நாங்க நிறைய இன்வெஸ்ட் பண்ணி இருக்கோம் நடக்குமா..

நடக்காதா என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் அதற்கு அந்த ஆபீஸர் பொருட்காட்சியை நடத்தணும்னு தான் எங்களுக்கும் ஆசை, அதை நடத்தலன்னா கவர்மெண்ட்க்கும் கெட்ட பெயர் தான் இருந்தாலும் அங்க தண்ணி நிறைய நிக்குது அதனால நடத்தலாமா வேண்டாமா என்பதை பத்தி நாளைக்கு நடக்க போற மீட்டிங்ல பேசிட்டு தான் முடிவு எடுக்க முடியும் என்று சொல்கிறார்..

வீட்டுக்கு வந்த ரவி – ஸ்ருதி.. விஜயாவின் திட்டத்தை சுக்குநூறாக உடைத்த முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பிறகு பாக்கியா நம்ம முதலுக்கு மோசம் வராததற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு என்று பொருட்காட்சி காண்ட்ராக்டை ஒன்றறை லட்சம் கொடுத்து வாங்கிவரிடம் சென்று பொருட்காட்சி நடக்குமானு தெரியல அதனால நான் உங்ககிட்ட கொடுத்த 1.5 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்க முடியுமா, இல்லன்னா அதுல பாதி பணத்தை யாவது குடுப்பீங்களா என்று கேட்க காண்ட்ராக்ட் நடக்கிறது.

நடக்காததும் உங்க பிரச்சனை அதுல லாபம் வந்தா எனக்கா தர போறீங்க நஷ்டம் வந்தாலும் நீங்க தான் பாத்துக்கணும் இது சம்பந்தமா இனிமே என்கிட்ட பேசாதீங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.. பாக்கியா என்ன இவர் இப்படி பேசிட்டாரு என்று குழம்பி போய் நிற்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..