கட்டுன பொண்டாட்டியை அழைக்க பாக்கியா வீட்டிற்க்கு வரும் கணேசன்.! அமிதாவை அழைத்துக்கொண்டு சென்ற எழில்.? பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலக்ஷ்மி

Baakiyalakshmi today episode december 26 : இன்றைய எபிசோடில் பாக்கியா கணேஷ் கொடுத்த ஒரு மாத கெடு முடிஞ்சுச்சு, இப்ப வீட்டுல எல்லோரும் செழியன் பிரச்சனையாள ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க இந்த நேரத்துல நான் எப்படி கணேச பத்தி சொல்றது என் குடும்பத்துக்கு மட்டும் இவ்வளவு சோதனையை தர என கடவுளிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.. அடுத்த நாள் காலையில் பாக்யா செழியனுக்கு காபி போட்டு எடுத்துட்டு போகிறார் அப்பொழுது செழியன் தூங்கிக் கொண்டிருப்பதால் அந்த காபியை கோபியிடம் கொடுத்து விட்டு வருகிறார்.

பிறகு ராதிகாவும் கோபி மற்றும் செழியனுக்கு காபி போட்டு எடுத்துட்டு போகும்போது செழியன் தூங்கிட்டு இருந்தான் அதனால நான் எடுத்துட்டு போன காபியை அவர் கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன் என்ன சொல்வதற்கு ராதிகா காபி கொடுக்கறதுக்குலாம் நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன் பரவாயில்ல விடுங்க என்று சொல்கிறார். அடுத்து கணேஷ் அவங்க அப்பா அம்மாவிடம் பாக்கியலட்சுமி கொடுத்த ஒரு மாத கெடு முடிஞ்சிடுச்சி நான் போய் அமிர்தாவையும் நிலாவையும் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல கணேஷ் உடைய அப்பா அம்மா நீ அங்க போகாத என்று சொல்கின்றனர்.

எந்த வயதிலும் சாதிக்கலாம்.. 58 வயதில் இமாலய சாதனை படைத்த முத்துக்காளை வாழ்த்தும் ரசிகர்கள்..

ஆனால் கணேஷ் நான் போய் கூப்பிட்டா அமிர்தா சந்தோஷம் தான் படுவா, போய் அழைச்சிட்டு வரேன் என்று அவங்க சொல்றதையும் கேட்காமல் கிளம்பி விட்டார்..  உடனே பாக்யாவும் கணேஷ் உடைய அம்மாவுக்கு போன் பண்ணி நான் எதுக்காக பேசுறேன்னு உங்களுக்கு தெரியும் ஏற்கனவே எங்க வீட்டுல பல பிரச்சனை போயிட்டு இருக்கு அதனால என்னால கணேச பத்தி வீட்ல சொல்ல முடியல நீங்க கொஞ்சம் கணேஷ் கிட்ட பேசுங்க என்று சொல்ல நாங்க சொல்லியும் அவன் கேட்கல அவன் உங்க வீட்டுக்கு வர கிளம்பிட்டான் என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி ஆகிறார்.

பிறகு கணேஷ் வீட்டுக்கு வந்தா என்ன ஆகுமோ என்று பாக்யா பதட்டத்தில் இருக்கும் பொழுது பழனிச்சாமியும் போன் பண்ணுகிறார்.. பழனிச்சாமி இடம் பாக்யா நடந்தவற்றையெல்லாம் சொல்ல கணேஷ் இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வரக்கூடாது இந்த உண்மை இப்போதைக்கு தெரியாத அளவுக்கு பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். பிறகு பாக்யா அமிர்தாவுடைய அம்மாவுக்கு போன் பண்ணி நான் கணேச பத்திய உண்மையை வீட்ல சொல்ல போற அவன் எங்க வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கான் அவன் வந்து உண்மையை சொல்றதுக்குள்ள நானே சொல்லி ஆகணும் என்று சொல்ல..

கொட்டும் மழையில் மகாவை வீட்டை விட்டு வெளியே தள்ளிய சூர்யா.. விஷயம் தெரிந்து பதறி அடித்து ஓடி வந்த கோடீஸ்வரி.. பரபரப்பான கட்டத்தில் ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்..

அமிர்தா உடைய அம்மா கணேசன பத்தி சொன்னீங்கன்னா என்னோட பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகிறது என்று பயப்படுகிறார். பிறகு பாக்யா எழிலை அவசர அவசரமாக கூப்பிட்டு நீ அமிர்தாவையும் நிலாவையும் கூட்டிகிட்டு கோயிலுக்கு போ என்று சொல்ல என்ன திடீர்னு கோவிலுக்கு என ராமமூர்த்தி கேட்பதற்கு நான் கேண்டீன் நல்லபடியா முடிஞ்சா கோவிலுக்கு வரேன்னு வேண்டி இருந்த என்னால போக முடியல அதுக்கு தான் அமிர்தாவை போக சொல்றேன் நீ உடனே கூட்டிட்டு போ என்று பதட்டதோடு சொல்ல எழில் சரி அம்மா நான் போறேன், உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்க நீ போ நான் நல்லா தான் இருக்கேன் என்று எழிலை வேக வேகமாக அனுப்பி வைக்கிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.