thamizhum sarasvathiyum

தமிழ் கம்பேனியை திறக்க விடக்கூடாது என அர்ஜுன் செய்த சம்பவம்.! கடைசியில் உதவிய நபர்.. கடை திறப்பு விழாவிற்கு வந்த சரஸ்வதி.. பெயர் என்னவா இருக்கும்.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் ஒளிபரப்பாகி வரும் சீரியலும் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் இருந்து வரும் நிலையில் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும்.

பல பிரச்சினைகளுக்குப் பிறகு குடும்பத்தை பிரிந்த தமிழ் எப்படியாவது சொந்தமாக தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். எனவே சாப்பிடுவதற்கு கூட தமிழும் சரஸ்வதியும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் சரஸ்வதி தான் வேலைக்கு போவதாக கூறுகிறார் ஆனால் தமிழ் சரஸ்வதி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் வெற்றிகரமாக புதிய கம்பெனியை தமிழ் நாளைக்கு ஓபன் செய்ய முடிவெடுத்து இருக்கும் நிலையில் அர்ஜுன் வழக்கம் போல் ஆபிஸருக்கு லஞ்சம் கொடுத்து அந்த கம்பெனியை திறக்க விடக்கூடாது என கூறுகிறார். அதேபோல் அந்த ஆபீஸ் வரும் நாளைக்கு கம்பெனி திறக்க முடியாது அப்படி திறந்தால் சீல் வைத்து விடுவதாக மிரட்ட இந்த நேரத்தில் மினிஸ்டர் தமிழை பார்த்து விடுகிறார்.

பிறகு அவர் ஆஃபீஸரை சந்தித்து இவர் நமக்கு வேண்டிய தம்பி எந்த பிரச்சனையும் வரக்கூடாது எனக் கூற உடனே அந்த ஆபிசர் சைன் போட்டு சொல்ல இதனால் அர்ஜுன் அவரிடம் சண்டை போடுகிறார். மேலும் கம்பெனி திறப்பு விழாவை பற்றி மினிஸ்டரிடம் கூற என்னலாம் கூப்பிட மாட்டியா என கேட்க அதற்கு கண்டிப்பாக வாங்க சார் நாளைக்கு நீங்கதான் திறந்து வைக்கிறீங்க என கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அந்த மினிஸ்டர் வரும்போது சரஸ்வதியையும் தன்னுடன் அழைத்து வரும் நிலையில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். மேலும் அந்த கம்பெனிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் அவர் தனது அம்மா மேல் கோபமாக இருந்தாலும் சரஸ்வதி என்ற பெயரை வைப்பாரா? என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

மாலத்தீவில் ரொமான்ஸ் செய்து அலியா மனசாவுக்கு லீப் லாக் கொடுத்த வீடியோவை வெளியிட்ட சஞ்சீவ்.!

வெள்ளித்திரை ஜோடிகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் வருகிறதோ அதேபோல் சின்னத்திரை ஜோடிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனிமவுசு உருவாகியுள்ளது. சொல்லப்போனால் நட்சத்திர ஜோடிகளை விட சின்னத்திரை ஜோடிகளுக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகமாக இருந்து வருகிறது இவர்களை தொடர்ந்து நாள்தோறும் சீரியல்களில் பார்ப்பதனாலோ என்னவோ விரைவில் ரசிகர்கள் மனதை கவர்ந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் சிறந்த ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சஞ்சீவ், அலியா மானசா. இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே காதலித்து பிறகு தங்களுடைய பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு தற்போது இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு அழகான குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்களுடைய புகைப்படங்களையும் அவ்வப்பொழுது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர்கள் கொரோனா பிரச்சனையின் காரணமாக வீட்டில் இருக்கும் பொழுது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார்கள்.

அதில் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்ட நிலையில் பிறகு சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். இதனை தொடர்ந்து அலியா மானசா ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்த நிலையில் பிறகு இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

aliya manasa-sanjeev
aliya manasa-sanjeev

மேலும் குழந்தை பிறந்த பிறகு ரீ என்ட்ரி கொடுத்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடிப்பதிலிருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்ட சஞ்சீவ், அலியா மானசா தங்களுடைய குழந்தைகளுடன் மாலத்தீவு சென்றுள்ளனர் அங்கு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் ரொமான்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.

aliya manasa sanjeev
aliya manasa sanjeev

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.