மாட்டிக்கிட்ட பயத்தில் கௌதமை அடிக்கும் சித்ராதேவி !! மகாவை தூக்கி ரொமான்ஸ் செய்யும் சூர்யா.. ஆஹா கல்யாணம்..

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு மகா நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல்  குடும்பத்தாரிடம் சொல்கிறார். இதைக் கேட்ட அனைவரும் சந்தோஷமடைகின்றனர். சாமி சிலையை மீட்டுக் கொடுத்ததற்காக சூர்யாவிற்கு பாராட்டு தெரிவிக்கின்றனர். ஹீரோ போல நடந்து கொண்டதாக சொல்லி பாராட்டுகின்றனர்.

ஆனால் ராஜலட்சுமி நீ ரவுடிங்க கூட சண்டை போடும்போது உனக்கு ஏதாவது ஆயிருந்தா என்ன பண்றது ஏன் இப்படி நீ போய் அவங்க கூட சண்டை போட்ட என்ன சூர்யாவை திட்டுகிறார்.  அப்போது வீட்டில் இருக்கும் அனைவரும் ராஜலட்சுமியை திட்டுகின்றனர் இதனால் கோபம் அடைந்த ராஜலட்சுமி நான் எது பேசினாலும் தப்பு இனிமே எதையும் பேச மாட்டேன் என கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

கோபிக்கு ஆதரவாக இருக்கும் செழியன், இனியா!! கோபிக்காக மொத்த நகைகளையும் கொடுக்கும் பாக்யா.!

மேலும் ரவுடிகளை போலீசில் பிடித்துக் கொடுத்துட்டியா என தாத்தா கேட்க அதற்கு சூர்யா குடுத்துட்டேன் கமிஷனரிடமும் சொல்லிட்டேன். இதுக்கு பின்னாடி யார் இருக்கா என கண்டுபிடிக்க சொல்லி இருக்கேன் என சொன்னதும் சித்ரா தேவியும் கௌதமும் பயப்படுகின்றனர்.

ரவுடிகளை பிடித்து விட்டோம் சிலையை மீட்டு விட்டோம் என சொன்னதும் சித்ராதேவி ஷாக் ஆகிறார். இதை பார்த்து மகா எல்லாரும் சந்தோஷப்படுறாங்க நீங்க மட்டும் ஷாக் ஆகுறீங்க என அவர்கள் மீது சந்தேகப்படுகிறார்.

அதனை தொடர்ந்து ரூமுக்கு போயி சித்ராதேவி கௌதமை அடிக்கிறார் எந்த காரியத்தையும் நீ சரியா செஞ்சது இல்ல நீ ஒண்ணுக்கும் லாக்கி இல்ல நம்ம மாட்டிக்க போறோம் எப்படியாவது நீ அந்த போலீஸ கரெக்ட் பண்ணி மாட்டிக்காம இருக்க என்ன செய்யணுமோ அதை செய் என கூறுகிறார்.

அண்ணாமலை சட்டை பாக்கெட்டில் இருந்து காசை திருடிய மனோஜ்.! நீ எல்லாம் திருந்தவே மாட்டியா..

அடுத்த சீனில் ரூமில் மகா சூர்யாவை கட்டிப்பிடித்ததை நினைத்து சிரித்து கொண்டிருக்கிறாள் அப்போது அங்க வரும் சூர்யா என்ன தனியா சிரிச்சிட்டு இருக்க எனக் கேட்கிறார். அதற்கு மகா உங்கள நினைச்சு தான் சிரிச்சிட்டு இருக்கேன் என கூறுகிறாள்.

உடனே சூர்யா சண்டை போடுவதெல்லாம் சாதாரணம் என பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் அங்கு ஒரு காக்ரோச் வருகிறது அதை பார்த்து சூர்யா பயப்படுகிறார். காக்ரோச் னா எனக்கு கொஞ்சம் அருவருப்பா இருக்கும் புடிக்காது என சொல்கிறார் அதற்கு இல்ல உங்களுக்கு பயம் என மகா விளையாடுகிறார்.

அதனைத் தொடர்ந்து மகாவை பத்து நிமிஷம் தூக்கி நிற்கிறார் சூரியா யார் வந்தாலும் எதுக்காகவும் நான் உன்ன இறக்க மாட்டேன் என சொல்லிவிட்டு தூக்கி கொண்டு நிற்கிறார். இப்போது இருவரும் ரொமான்ஸ் செய்கின்றனர் இதை பார்த்த ஐஸ்வர்யா இவங்களுக்கு வேற வேலையே இல்லை என கடுப்பாகிறாள். மகா நீங்க கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வரீங்க எனக்கு நல்லாவே தெரியுது என மனசுக்குள்ளேயே  நினைத்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Exit mobile version