துருவி துருவி கேள்வி கேட்கும் ராஜலட்சுமி கண்ணீரில் மிதக்கும் சூர்யா… அப்ப எல்லாமே பொய்யா என கேள்வி கேட்டுவிட்டு வெளியே சென்ற மகா..

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் ராஜலட்சுமி சூர்யாவிடம் உண்மையை சொல் எனக் கேட்கிறார். அதற்கு சூர்யா சூழ்நிலை சரியில்லை ஆனால் இப்போது எதுவும் சொல்ல முடியாது என அழுதபடி சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

பிறகு ஹாலில் உட்கார்ந்து சூர்யா, சூர்யா அப்பா, தாத்தா என  மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சூர்யாவின் அப்பா ட்ரீட்மென்ட் காக  வெளிநாட்டிற்கு செல்லலாம் என தாத்தாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் செத்தாலும் நான் இங்கதான் சாவணும் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பாட்டி அங்கு வந்து விடுகிறார்.

பாட்டி நீங்க பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டுட்டு இருந்தேன் என சொல்கிறார். உடனே சூர்யா  பயப்படுகிறார் ஆனால் யோசிக்கிறார் அப்படியான பாட்டி முகத்தில் ஒரு வருத்தம் தெரியனுமே  என யோசிக்கிறார். உடனே பாட்டி அம்மா நீங்க பிசினஸ் பற்றி தானே பேசிட்டு இருந்தீங்க என கேட்க அதற்கு சூர்யா ஆமாம் பாட்டி என்ன சொல்கிறார்.

ரோகிணி மாமா மீது முத்துவுக்கு வந்த சந்தேகம்.! சரக்கை ஊத்தி கொடுத்து காரியத்தை சாதிக்க போகும் முத்து.!

உடனே பாட்டி, தாத்தா அன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்ததுல இருந்து டயர்டாவே இருக்காங்க என சொல்லிவிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்கப்பா அப்படின்னு சொல்லுகிறார்.உடனே அங்கிருந்து சூர்யாவும் அவரது அப்பாவும் சென்று விடுகின்றனர்.

இதற்கிடையில் பிரபாகிரவுண்டுக்கு சென்று அந்த குரூப்பை அடிக்கிறார் இரண்டு குரூப்புக்கும் நடுவே சண்டை நடந்து கொண்டிருக்கிறது அப்போது பிரபாவை ஒருத்தன் மண்டையில் அடிக்க போகிறான். அப்போது விஜய் அவளை காப்பாற்றுவதற்காக குறுக்கே போகிறான், உடனே அவனது  தலையில் அடித்து விடுகின்றனர்.

பிரபா உடனே அவனை வீட்டிற்கு அழைத்து வந்து முதலுதவி செய்து  கட்டு கட்டி விடுகிறாள்.  அந்த சமயத்தில் விஜய்க்கு அனாமிகா போன் பண்ணுகிறாள். அந்த போனை அட்டென்ட் பண்ணிய  பிரபா, விஜய்க்கு தலையில் அடிபட்டு இருக்கு பேச மாட்டார் என சொல்லுகிறார்.

திருவிளையாடல் திரைப்படத்தில் தனுசுக்கு தம்பியாக நடித்த சிறுவன் இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

அதன் பின்னர் மகா துணி மடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சூர்யாவிற்கு ஃபோன் கால் வருகிறது. ஆனால் சூர்யா வாஷ் ரூமில் இருக்கிறார். தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் வேறு வழி இல்லாமல் மகா போனை எடுக்கப் போகிறாள். அதைப் பார்த்த சூர்யா என்ன என் போனை எடுத்து செக் பண்றியா என மகாவிடம் சண்டை போடுகிறார்.

அதற்கு மகாவோ ஒரு போன் எடுக்கறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லை அப்புறம் எப்படி உங்க வாழ்க்கையில் எனக்கு இடம் இருக்கும்.அப்ப நீங்க கொஞ்சம் கொஞ்சமா மாறி கிட்டு இருக்கேன்னு சொன்னது    பொய்யா என கேட்டுவிட்டு கோபமாக ரூமை விட்டு வெளியேறுகிறார். உடனே சூர்யா ஐயையோ என்ன நடக்க போகுதோ என மஹாவை கூப்பிட்டபடி வெளியே போகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.