பிரபல நடிகையுடன் நடிக்க முடியாது என கூறிய சூப்பர் ஸ்டார்.. பல வருட ரகசியத்தை வெளியே சொன்ன நடிகை

Rajinikanth: நடிகை ரம்பா தன்னுடன் ரஜினிகாந்த் நடிக்க மறுத்ததற்கான காரணம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த ரம்பா குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார். தற்பொழுது தொடர்ந்த சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அருணாச்சலம் திரைப்படத்தில் ரம்பா மற்றும் ரஜினிகாந்த் நடித்திருந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் ரம்பாவுடன் நான் நடிக்க மாட்டேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல வருடங்கள் கழித்து ரொம்ப முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.

90 காலகட்டத்தில் ரம்பாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக விளங்கிய ரம்பா விஜய், அஜித் போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல் ரஜினி கமல்ஹாசன் போன்றவர்களுடனும் நடித்துள்ளார். சமீபத்தில் அருணாச்சலம் திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

தினேஷ் குறித்து பேசியதற்கு கமல் கொடுத்த சரியான பதிலடி.. டைட்டில் வின்னராகும் தகுதியை இழந்த விசித்ரா

அதில் நான் ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு முறை திரைப்படங்களில் நடித்திருந்தேன் அந்த நேரத்தில் இயக்குனர் சுந்தர் சி என்னிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொன்னார் அது என்னன்னா நீங்க அடுத்ததாக ரஜினி சார் நடிக்கும் படத்துல தான் நடிக்க போறீங்கன்னு சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அப்புறம் கொஞ்ச நாளிலேயே ரஜினி சாரோட நடிக்கும் படத்திற்கான ஷூட்டிங் தொடங்கப்பட்டது அது என்ன படம்னா அருணாச்சலம்.

இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நானும் சௌந்தர்யாவும் அவ்வளவு நெருக்கமா இருப்போம் சௌந்தர்யா பார்ப்பதற்கு தான் அமைதியாக இருப்பாங்க ஆனால் எப்பொழுதும் என்னோட ஜாலியா துரு துருனு இருப்பாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரும் எங்களை பார்த்து கிண்டல் செய்வார்கள் அப்பொழுது ரஜினி சார் கூட சொல்லுவாரு சௌந்தர்யா பார்க்க இன்டெலிஜென்ட் மாதிரி இருக்கும் ஆனா வெகுளி ஆனால் இந்த ரம்யா வெகுளி மாதிரி இருக்கும் ஆனா ரொம்ப இன்டெலிஜென்ட்டான பொண்ணு என்று என்னை பார்த்து சொல்வார்.

ஆனால் அப்படியெல்லாம் பேசிய நபர் தான் ஒரு நாட் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை அழ வைத்துவிட்டார். ஒரு நாள் எல்லாரும் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தோம் அந்த நேரத்தில் நான் அருணாச்சலம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சல்மான் கான் கூட இன்னொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போ ஹைதராபாத்தில் அருணாச்சலம் திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சல்மான் கான் வந்திருந்தார்.

நான் ஏற்கனவே சல்மான் கானோடு இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தேன் அதனால் அவரைப் பார்த்ததும் ஓடி சென்று கட்டிப்பிடித்து வணக்கம் சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் பேசிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் இதையெல்லாம் ரஜினி சார் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார் பிறகு நான் வந்ததும் அங்கு இருந்தவர்களிடம் கோபமாக பேசிக்கொண்டே இருந்தார். கையில் வைத்திருந்த ஒரு துண்டை தூக்கி கீழே போட்டு விட்டு எல்லாரிடமும் கோபமாக பேசினார்.

விஜய் சேதுபதி சட்டை பட்டன், செருப்பு பிச்சிகிச்சு.. கோவை சரளா, அபிராமி மாட்டிகிட்டாங்க – மன்சூர் அலிகான்

அங்கிருந்து சுந்தர் சி உட்பட எல்லாரும் என்னையே திரும்பத் திரும்ப பார்க்கிறார்கள். என்னையும் பார்க்கிறார்கள் ரஜினி சாரையும் பார்க்கிறார்கள் எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை ஏதோ தப்பா நடந்திருக்கு மட்டும் புரிஞ்சது ஆனால் என்ன பிரச்சனைங்கிறது புரியாமல் நான் முழித்துக் கொண்டிருந்தேன் அப்போ சுந்தர் சி சார் கிட்ட வந்து என்ன ரம்பா இப்படி பண்ணிட்டீங்க என்று கேட்டார் எனக்கு என்னன்னு தெரியலையே சார் என்ன ஆச்சுன்னு நான் கேட்டேன்.

நீங்களே ரஜினி சார் கிட்ட பேசுங்கன்னு சொன்னார் நான் அவர்கிட்ட பேசுறதுக்கு முன்பே எனக்கு அழுக வந்துருச்சு நான் அழுதுகிட்டே இருந்தேன் அப்போ ரஜினி சார் வந்து என்ன ஆச்சு ஏன்டா குழந்தையை அழ வைத்தீர்கள் என்று கேட்டார் அப்புறம் தான் நான் கொஞ்சம் சமாதானம் ஆனேன். அதன் பிறகு எதற்காக அவர் கோபப்பட்டார் என்பதை நடித்துக் காட்டினார் அங்கிருந்த ரெண்டு மூணு பேர நிக்க வச்சுட்டு இதுவரைக்கும் ரம்பா நம்ம கிட்ட வணக்கம் எப்படி சொல்லுவாங்கன்னு கேட்டாரு எல்லோரும் நான் எப்படி செட்டுக்குள்ள வந்தது அமைதியா வணக்கம் சொல்லு வேணோ அதையே செஞ்சு காட்டினார்கள்.

அதற்கு ரஜினி காந்த் ஆனால் இன்றைக்கு சல்மான் கான் வந்தது ஓடி போய் கட்டி பிடிச்சு வணக்கம் சொன்ன மாதிரியே செஞ்சு காட்டினார். பிறகு நாங்க தென்னிந்திய நடிகர்கள் என்பதால் எங்களுக்கு ஓறவஞ்சனை காட்டுறீங்களா? நீங்க உங்க நார்த் பீப்பிள் வந்தா அவங்க கிட்ட வித்தியாசமா நடந்துப்பீங்களா என்று அப்படியே நடிச்சி காட்டினார். நான் ஒரு நிமிஷம் அப்படியே மிரண்டு போய்விட்டேன் உண்மையிலேயே சொல்றேன் இது பெரிய அளவில் சண்டையா வரல ஆனால் ரஜினி சார் இப்படியெல்லாம் பண்ணுவார் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கல பிறகு ஷூட்டிங் எப்பொழுதும் போல நடந்துச்சு என்று ரம்பா கூறி உள்ளார்.

Exit mobile version