விஜய் சேதுபதி சட்டை பட்டன், செருப்பு பிச்சிகிச்சு.. கோவை சரளா, அபிராமி மாட்டிகிட்டாங்க – மன்சூர் அலிகான்

Vijayakanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த். அவர் கடந்த 28 ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.  விஷயத்தை கேள்விபட்ட தொண்டர்கள், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வர முடியாதவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் விஜயகாந்த் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் போன்றவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர் அப்படிதான் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வயதான பாட்டியை கூப்பிட்டு போங்கடா என துரத்த பார்த்த புஸ்ஸி ஆனந்த்.. அதற்கு விஜய் என்ன செய்தார் தெரியுமா..?

விஜயகாந்தின் காலடியிலேயே பல மணி நேரம் மன்சூர் அலிகான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜயகாந்த் அஞ்சலி செலுத்த வந்த பொழுது சினிமா பிரபலங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து மன்சூர் அலிகான் வெளிப்படையாக பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. நடிகர் சங்கம் சார்பில் ஊர்வலமாக போய் அஞ்சலி செலுத்த திட்டமிட்டப்பட்டது நானும் கேள்விப்பட்டு ஊர்வலமாக செல்வதற்கான செயல்களை செய்தேன்.

விஜய் ஹோட்டலில் இருந்து 100 அடி சாலையில் செல்லும் பொழுது கூட்டம் கடுமையாக இருந்தது நடிகை அபிராமி எல்லாம் நசுக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்தது பெரிய விஷயம் கோவை சரளா உடன் வந்த பல நடிகைகள் கூட்டத்தில் நசுக்கினர் நடிகர் விஜய் சேதுபதியை எல்லாம் நசுக்கி சட்னி ஆக்கிவிட்டார்கள் அவரது சட்டை பட்டன் செருப்பு எல்லாம் பிய்ந்துவிட்டது. அந்த அளவு கட்டுக்கடங்காத கூட்டம் காவல் துறையினர் முடிந்த அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கண்ணீரில் மிதக்கும் பாக்கியாவை துடைத்து விடும் கோபி.. வாய் பேசாமல் வேடிக்கை பார்க்கும் ராதிகா – பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ

விஜயகாந்த் உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்த வந்த பொழுது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி காலனிகளை வீசியதாக கூறப்படுவது குறித்து மன்சூர் அலிகான் சொன்னது.. இந்த மாதிரி எல்லாம் திட்டமிட்டு எதுவும் செய்திருக்க மாட்டார்கள் மிகப்பெரிய கூட்டத்தில் யாராவது விஷமிகள் யாராவது செய்திருப்பார்கள் உண்மையான விருப்பு வெறுப்புகளில் அதை எல்லாம் கணக்கில் சேர்க்கக்கூடாது விஜய் கேப்டன் விஜயகாந்த் மீது பேரன்பு மிக்கவர் அவருடன் நடித்து அவரை வளர்த்து விட்ட அவர் கேப்டன் என்றார்.

Exit mobile version