தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு எமோஷ்னலான பதிவை வெளியிட்ட ரச்சிதா மகாலட்சுமி.! உனக்கு-நான், எனக்கு-நீ..

Rachitha Mahalakshmi: சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் முதன் முறையாக தன்னுடைய எமோஷ்னலான பதிவை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா போன்ற மூவரையும் தொடர்ந்து நேற்று வினுஷா மற்றும் யுகேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

விக்ரம் படத்தின் வசூலை முறியடித்த லியோ.! எங்கு தெரியுமா.? குஷியில் தளபதி ரசிகர்கள்

இவ்வாறு இதனை தொடர்ந்து முதன்முறையாக பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் 5 பிரபலங்கள் வைல்ட் கார்டில் நுழைந்திருப்பது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சனை கொடுத்துள்ளது. எனவே இன்று வெளியான இரண்டு ப்ரோமோக்களிலும் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களுக்கும், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் இடையே நடைபெறும் சண்டை காட்சிகள் முற்றி இருப்பது தெரிய வருகிறது.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

எனவே இதற்கு மேல் பிக் பாஸ் முன்பை விட வேறு மாதிரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 5 வைல்ட் கார்டு பிரபலங்களில் ஒருவராக ரச்சிதாவின் கணவரும் சீரியல் நடிகருமான நடிகர் தினேஷ் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீப காலங்களாக சில பிரச்சனைகளால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

குட்டி ஸ்டோரி ரெடி.. லியோ படத்தின் சக்சஸ் மீட் எப்பொழுது தெரியுமா.? ஆனால் இத்தனை பேர் மட்டுமே அனுமதி

இந்நிலையில் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு முதல் பதிவாக ரச்சிதா தனது தந்தை இறந்த 11வது நாள் நிகழ்ச்சியின் புகைப்படத்தை பதிவிட்டு தனது அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு உனக்கு-நான், எனக்கு-நீ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ரச்சிதா மகாலட்சுமிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.