கமலே பர்மிஷன் கேட்டுட்டு தான் என்ன தொடுவாரு..! நீ என்ன கேட்காமலே தொடுறியா.. தாலி கட்டும் முன்பே அசிங்கப்படுத்திய நடிகை.! பிறகு இணைந்தது தான் சுவாரசியம்…

Ramki-Nirosha: சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் தங்களுடன் இணைந்து பணியாற்றும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வரையிலும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி 80, 90 காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபலங்கள் தான் நடிகர் ராம்கி மற்றும் நடிகை நிரோஷா.

பொதுவாக காதல் மோதலில் ஆரம்பிக்கும் என்பதற்கு உதாரணமாக மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்து திருமணமும் செய்துக் கொண்டு ஒன்றாக தற்பொழுது வரையிலும் வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுடைய காதல் எங்கு மலர்ந்தது என்பது குறித்து நடிகை நிரோஷா பேட்டி அளித்துள்ளார்.

சங்கீதாவிற்கு முன் விஜய்க்கு பார்க்கப்பட்ட பெண் இவரா.? தளபதியின் ஆசையால் தம்பி மகளை தூக்கி எறிந்த ஷோபனா

நிரோஷா ராம்கி இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர் இவர்களுடைய ஜோடிக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. ஆனால் நிரோஷா ராம்கி இருவருக்கும் சுத்தமாக செட்டாகாமல் அடிக்கடி படப்பிடிப்பில் சண்டை தான் வருமாம்.

அதுவும் முக்கியமாக நடிக்கும் பொழுதும் கூட வேண்டுமென்று ராம்கி நிரோஷாவிடம் வம்பு பண்ணுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி தொடும் காட்சிகளில் கமல் சாரே என்ன தொடும்பொழுது அனுமதி கேட்டு தான் தொடுவார் நீங்க ஏன் அனுமதி கேட்க மாட்டீங்களா என்று கோபத்துடன் கேட்டுள்ளார் நிரோஷா.

ஆறக்கடக்கிற வரைக்கும் அண்ணன்னு சொல்லுவீங்க.! ஆற கடந்தா யாருன்னு கேப்பிங்க.. 5 நடிகர்களை அடக்கி வைத்த வடிவேலு..!

இவ்வாறு இவர்களுக்குள் ஏழரைப் பொருத்தமாக இருந்தது இப்படி இருந்த இவர்கள் ஒரு காலகட்டத்தில் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதாவது, செந்தூரப்பூவே படத்தின் ஷூட்டிங் போது நிரோஷாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ராம்கி காப்பாற்றிவிட்டு நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூற அதன் பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் தற்பொழுது வரையிலும் இருவரும் ஐ லவ் யூ என்பதையே சொல்லிக் கொள்ளவில்லையாம்.

இவ்வாறு தற்பொழுது வரையிலும் நிரோஷா-ராம்கி தங்களுக்கு ஏற்றார் போல் கேரக்டர் உள்ள திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியிலும் இவர்களுக்கு என்று தனி மாவுசு உள்ளது.