சில்லுனு ஒரு காதல் சூர்யா பூமிகாவையே ரொமான்ஸில் தோற்கடிக்கும் சுந்தர் சி-குஷ்பூ.! எங்க காதலுக்கு எண்டே இல்லைங்கோ…

Actress Khushbu: நடிகை குஷ்பு விடம் இயக்குனர் சுந்தர் சி எப்படி தனது காதலை வெளிப்படுத்தினார் என்பது குறித்த தகவல் வெளியாகிவுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை குஷ்பூ தற்பொழுது வரையிலும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து பிரபலமானார். இவருடைய கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, அழகு போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர குஷ்புவிற்காக தமிழ்நாட்டில் கோவில் கட்டி ரசிகர்கள் வழிபட்டு வந்தனர். அதோடு மட்டுமல்லாமல் இட்லிக்கும் குஷ்பூ இட்லி என பெயர் வைத்தார்கள்.

ரோகினியை அறைந்த முத்து.. நெஞ்சை பிடித்து விழுந்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இவ்வாறு 80 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்த நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு இரண்டு மகள்களும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வரும் குஷ்பூ மேலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி இருந்தார்.

khushbu
khushbu

அதன் பிறகு திமுகவில் இணைந்த இவர் பிறகு காங்கிரஸ் இருக்கு சென்றார் அங்கும் சில பிரச்சனைகள் வந்ததால் பாஜகவில் ஐக்கியமாகி அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார். சமீப காலங்களாக நடிக்காமல் இருந்த குஷ்பூ தற்பொழுது மீண்டும் நடிக்க தொடர்ந்துள்ளார். அதன்படி தற்பொழுது ரமபானம் என்ற படத்தில் நடித்து வருகிறார். குஷ்பூ விடம் சுந்தர் சி எப்படி தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டு எழும் இந்திய சினிமா.. எகிறும் பாக்ஸ் ஆபிஸ்.! கெத்து காட்டும் ரஜினி

அதாவது ஒருமுறை குஷ்பூ விடம் சென்ற சுந்தர் சி நான் உன்னை காதலிக்கிறேன் என்றெல்லாம் சொல்லவில்லையாம் நமக்கு குழந்தைகள் பிறந்தால் உன்னைப் போல இருக்குமா? இல்லை என்னை போல இருக்குமா? என கேட்டிருக்கிறார். இதனைக் கேட்ட குஷ்பூவும் செம ஷாக்காகி உள்ளார். மேலும் சுந்தர் சி குஷ்புவிடம் எனக்கு சுத்தி வலைச்சல்லாம் பேச தெரியவில்லை. உன்னை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் நீ என்ன சொல்ற என கேட்டு இருக்கிறார். இவ்வளவு தைரியமா வந்து காதலை சொல்லிய உடன் குஷ்பூவும் சுந்தர் சி காதலுக்கு ஓகே சொன்னாராம்.