சித்ராதேவி பேச்சை கேட்டுகிட்டு இல்லாத கருவை கலைக்க முடிவு செய்த கௌதம்.. ரசிகர்களை பங்கம் செய்யும் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

Aaha kalyanam Today episode october 11 : இன்றைய எபிசோடில் இரவு கௌதம் வீட்டுக்கு வராததால்  ஐஸ்வர்யா காலிங் பெல்லை அடித்து எல்லோரையும் எழுப்பி கௌதம் ரெண்டு மூணு நாளாக வீட்டுக்கு நைட்டு ரொம்ப லேட்டா வராரு, இதுக்கெல்லாம் நீங்க தான் ஒரு பதில் சொல்லணும் என எல்லோரிடமும் கேட்க சித்ரா தேவி கௌதம் வரட்டும் நான் பேசுகிறேன் என்று சொல்கிறார்.

ஆனால் ராஜலக்ஷ்மி நாங்க எல்லோரும் இங்கேயே இருக்கோம் கௌதம் வந்ததும் எங்க முன்னாடியே நீ பேசு என்கிறார்.. கொஞ்ச நேரம் கழித்து கௌதமும் வீட்டிற்கு வந்து விட்டார்.. கௌதம் எல்லோரிடமும் ஒரு வேலை விஷயமா போன அங்கு லேட் ஆயிடுச்சு என்று சொல்கிறார் அதற்கு சூர்யா உனக்கு ஆபீஸ் வேலை எதுவும் இல்ல வேற எங்க போன என்று கேட்கிறார்.

குடும்பத்தினரை மீறி ஸ்ருதியை கைப்பிடிக்கும் ரவி.! பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பிறகு சித்ராதேவி கௌதம் செவிலில் அறைந்து நாலு செவத்துக்குள்ள நடக்க வேண்டிய விஷயத்தை இவ்வளவு பேர் முன்னாடி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. ஒழுங்கா இருந்தா இங்க இருங்க, இல்லன்னா தனி கொடுத்தனம் போயிடுங்க என்று பிரச்சனையை முடிப்பதற்காக இப்படி பேசுகிறார்.

அடுத்து கோடீஸ்வரியும், பார்வதியும் வீட்டில் இருக்கும் பொழுது சேட்டை தேடி போலீஸ் அங்கு வருகிறது. போலீசை பார்த்ததும் கோடீஸ்வரியும் பார்வதியும் பயந்து போய் நிற்கின்றனர்.. பிறகு போலீஸ் சேட்டை காணும் என்று கேட்க கோடீஸ்வரி நான் மாசம் மாசம் கரெக்ட்டா பணம் கட்டிடுவேன் அவரை நான் பார்க்கவில்லை என்கிறார்.

தலைவர் 171 பர்ஸ்ட் லுக் போஸ்டர் லோகி இப்படி தான் வெளியிடுவாரா.? அப்போ அன்னைக்கு தான் ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளியே..

அடுத்து கௌதம் சித்ரா தேவியிடம் நீதான் எனக்கு பிளான் போட்டு கொடுத்த இப்ப லேட்டா வந்தேன் என்று நீயே என்னை எல்லாரு முன்னாடியும் அடிச்சிட்டியே என்று கேட்க நான் உன்னை அடிக்கவில்லை என்றால் பிரச்சனை பெருசாகி இருக்கும்.. ஆனா  ஐஸ்வர்யா எல்லாருக்கும் முன்னாடி உன்னை அசிங்கப்படுத்திட்டா.

Aaha kalyanam
Aaha kalyanam

அவள் கர்ப்பத்தை கலைச்சிட்டா உனக்கு வேற ஒரு பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்ல கௌதம் கர்ப்பத்தை கலைச்சிட்டா போதுமா அப்ப அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் என ஐஸ்வர்யாவின் கர்ப்பத்தை கலைக்க திட்டம் போடுகின்றனர்.. இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது