ராஜலட்சுமி குடும்பத்தை சமாளிக்க நடுராத்திரியில் ஐஸ்வர்யா பார்க்கும் வேலை.. மாட்டுனா அவ்வளவுதான் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode January 3 : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் ராஜலட்சுமி மகாவிடம் வீட்டில் உள்ள யாரும் பேசக்கூடாது என்று கட்டளை போட்டு விட்டார். அதனால் மகா டீ போட்டுக் கொடுக்க யாரும் வாங்காமல் மகாவிடம் பேசவில்லை பிறகு காயத்ரி ஒரு பேப்பரில் மகா என்னை மன்னித்துவிடு ராஜலட்சுமி அக்கா தான் உன்கிட்ட பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்க..

அதனால தான் பேச முடியல சாரி என்று எழுதி கொடுத்துள்ளார் பிறகு சித்ராதேவி மகாவிடம் வந்து வீட்ல இருக்குற யாரும் உன் கிட்ட பேசாம ஒதுக்கி வச்சுட்டாங்களா உனக்கு இரண்டே ஆப்சன் தான் இருக்கு ஒண்ணே உங்க அத்தை சொல்றத கேட்டு நடந்துக்கோ இல்லன்னா இந்த வீட்டை விட்டு கிளம்பு என்று சொல்ல மகா மூன்றாவது ஒரு ஆப்ஷன் இருக்கு நான் மௌனமா இருந்து போராட்டம் பண்ணி சாதிப்பேன் என்று சவால் விடுகிறார்.

ஜனனிக்கு ட்விஸ்ட் வைக்கும் வில்லன்கள்.. அண்ணன் மீது கேஸ் கொடுத்த ஆதிரை..

அடுத்து ஐஸ்வர்யா அவருடைய தோழிக்கு போன் பண்ணி எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல, பிரக்னன்சி பாஸிட்டிவ் வரல, என்று சொல்ல இதெல்லாம் கடவுள் கொடுக்கிற வரம் நம்ம நினைக்கும் போது நான் நடக்காது ஆனா உன்னோட உடம்புல மாற்றம் ஏதும் வரலைன்னா உங்க வீட்ல கண்டுபிடிச்சுடுவாங்க ஏதாவது பண்ணு என்று சொல்லிவிட்டு போகிறார் பிறகு சூர்யா ரூமில் டிசைன் வரைந்து கொண்டிருக்கிறார் மகா வந்ததும் அதை மறைத்து வைத்து விட்டார்.

பிறகு மகா என்னன்னு கேட்க அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது என்று பேப்பரை எழுதி காண்பிக்கிறார் நான் கண்டுபிடிச்சிடுவேன் என்று சொல்லிவிட்டு பிறகு பவித்ராவுக்கு போன் பண்ணி உங்க சார் நைட்ல தூங்காம ஏதோ பண்ணிக்கிட்டு இருக்காரு என்ன பிரச்சனை என்று கேட்க அதுவா நீங்க உன்ன பண்ணி கொடுத்த மிடில் கிளாஸ் ஜுவல்லரி டிசைன்ல சில கரக்ஷன் பண்ணி தர சொன்னாங்க அதோட ஒரிஜினல் பைல் உங்ககிட்ட இருக்குன்னு சொன்னதுக்கு என்கிட்டே சார் ரொம்ப கோபப்பட்டார் என்று பவித்ரா சொல்லிவிட்டார்.

மீனாவுக்கு சொந்தமாக தொழில் ஆரம்பித்து கொடுத்த முத்து.. ஷாக்கான விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

பிறகு மகா இதுதான் பிரச்சனையா என்று நினைக்கிறார் அடுத்து பாதி இரவில் ஐஸ்வர்யா பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது காயத்ரி வந்து என்ன இந்த நேரத்தில் இவ்வளவு ஹெவியான பிரியாணி சாப்பிட்டுட்டு இருக்க, உடம்புக்கு எதாவது ஆயிடப்போகுது என்று கேட்க வயித்துல குழந்தை இருக்கிறதால அடிக்கடி பசிக்குது.

அதனாலதான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன் என்று ஐஸ்வர்யா சொல்கிறார்.. பிறகு நானே டயட் பண்ணி உடம்பை இவ்ளோ பிட்டா வச்சிருக்கேன் ஆனா இனிமே நம்ம வயிறு பெருசா தெரிய ஏதாவது பண்ணி ஆகணும் மாட்டேங்குது என்று நினைக்கிறார்.. அடுத்து கோடீஸ்வரையும் தசாதரனும் மகாவை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறனர்.

பிறகு கோடீஸ்வரி விஜய்க்கு போன் பண்ணி மகா அங்க நல்லா இருக்காங்களா அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கேட்க அந்த பிரச்சினை எல்லாரும் மறந்துட்டாங்க அண்ணி நல்லா தான் இருக்காங்க என்ற விஜய் சொல்கிறார்.. அடுத்து மகா சூர்யாவுடைய  இந்த டிசைனை பார்த்துவிட்டு இவ்வளவு சூப்பரா இருக்கு என்று நக்கல் பண்ணுகிறார் இதோட இன்றைய எபிசோடு  முடிந்துள்ளது.