மகாவிடம் யாரும் பேசக்கூடாது கண்டிஷன் போட்ட ராஜலக்ஷ்மி.. பொண்டாட்டியை கண்டும் காணாமல் போன சூர்யா – ஆஹா கல்யாணம் சீரியல்

Aaha Kalyanam today episode January 1 : இன்றைய எபிசோடில் மகா தாத்தா பாட்டி இடம் சொல்லிவிட்டு அவங்க அப்பா வீட்டுக்கு வேலை செய்ய போகிறார். அப்பொழுது தசாதரணும் மகாவ வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லணும் அதுக்கு தான் போன் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் போன் போகல, அப்படியே வந்தாலும் அவளை திரும்பி போக சொல்லணும் என்று சொல்லும் போது மகாவும் வீட்டிற்கு வந்து ஏன் திரும்பி போக சொல்லுவீங்க என்று கேட்கிறார்.

பிறகு கோடீஸ்வரி நீ உங்க வீட்ல சொல்லிட்டா வந்த, எப்படியும் உன்னை அனுப்பி இருக்க மாட்டாங்க அதனால தான் சொல்றேன் தேவையில்லாத பிரச்சனை வேணாம் திரும்பி போம்மா என்று சொல்ல நான் தாத்தா பாட்டி கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன், நமக்கு காண்டாக்ட் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி சார் ரொம்ப பாவம், இத நம்ப ஒழுங்கா முடிச்சு தரலனா அவரு நடுத்தெருவுக்கு வந்துடுவாரு..

சத்தமே இல்லமால் சைலண்டாக சம்பவம் செய்த விஜய்.! மேடையை அதிரவிட தான் இந்த ப்ளானா..

அவருக்காக இதை முடிச்சு தான் ஆகணும் என்று சொல்ல உடனே பிரபாவும் அக்கா சொல்றது கரெக்ட் தான் நம்ம எல்லோரும் சேர்ந்து சீக்கிரமா வேலையை முடிச்சி அவங்க சொன்ன டேட்டுக்குள்ள டெலிவரி அனுப்பனும், என்று சொல்வதும் பிறகு எல்லோரும் சேர்ந்து வேலையை செய்கின்றனர்.. அடுத்து ராஜலட்சுமி வீட்டில் பானுமதி இடம் நான் இன்னுமும் உங்களுக்கு நல்ல மருமகளா தான் நடந்துக்கிறேன்.

உங்க வார்த்தைய மீறி நான் எதுவுமே பேசினதில்ல ஆனா மகா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம உங்க கிட்ட மட்டும் கேட்டுட்டு போறா அவளுக்கு நான் பனிஷ்மென்ட் கொடுத்தா தப்பா என்று பேசிவிட்டு, பிறகு மகா வீட்டுக்கு வந்தால் யாரும் அவ கிட்ட பேசக்கூடாது என்று சொல்கிறார்.. அடுத்து மகா திரும்ப வீட்டிற்கு போக ரோட்டில் நடந்து போய் கொண்டு இருக்கிறார்.

நியூ இயர் வந்துடுச்சி… ஆனா ஹேப்பி மட்டும் வரல… 2024 கலாய் மீம்ஸ்..

அப்பொழுது மூணு ரவுடி பசங்க மகாவிடம் தனியா நடந்து போயிட்டு இருக்க, நாங்க மூணு பேரா வந்து இருக்கோம் வரியா சேர்ந்து நாலு பேரா போகலாம் என்று மகாவை கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கின்றன.. அந்த நேரத்தில் சூரியா அந்தப் பக்கமாக வருகிறார் சூர்யாவை பார்த்து மகா சந்தோஷப்படுகிறார்.. அந்த இடத்தில் சூரியா காரை நிறுத்தியதும் அந்த ரவுடி பசங்களும் உடனே எட்டிப் போய்விட்டனர்.

ஆனால் சூர்யா காரை விட்டு இறங்காமல் காரிலே உட்கார்ந்து இருப்பதால் அந்த ரவுடி பசங்க அவன் வர மாதிரி தெரியல என்று திரும்பி மகாவிடம் வந்து வம்பு இழுத்துக் கொண்டிருக்கின்றனர்.. சூர்யாவும் காரை எடுத்துக் கொண்டு மெல்லமாக போய்விட்டார் மகா என்ன போறாரு என்று சூர்யாவுடைய காரையே பார்த்துக் கொண்டிருக்கிறார் தூரத்தில் போய் சூரியா காரை நிறுத்துகிறார் இதோடு எபிசோட் முடிந்துள்ளது.