கட்டுன பொண்டாட்டி இருக்கும் போது வேறு ஒரு பொண்ணுக்கு ரூட் விடும் கௌதம்.. உச்சகட்ட கோபத்தில் சூர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

Aaha Kalyanam today epiode october 17 : இன்றைய எபிசோடில் கௌதம் வாயில் அலகு குத்தியதால் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்னால் சாப்பிட முடியாது என்கிறார் உடனே ஐஸ்வர்யா அப்படி என்றால் நானும் சாப்பிட மாட்டேன் என்று சொல்ல பாட்டி நீ வைத்துக் கொள்ள காரி சாப்பிடாமல் கிடஇருக்க கூடாது என்று சொல்வதும் ஐஸ்வர்யா ஆன்லைனில் தோசை ஆர்டர் பண்ணி கௌதமை பார்க்க வைத்து ரசித்து சாப்பிடுகிறார்.

அடுத்து மகாவும் சூர்யாவும் ரூமில் சில கேள்விகள் கேட்டுக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்..  அடுத்து விஜய் ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணி சாப்பிடுகிறார் அதை பார்த்த சூர்யா எனக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கும்னு தெரியும்ல, எனக்கு தராம நீ மட்டும் சாப்பிடுற குடு என்று வாங்குகிறார் அதை பார்த்து ராஜலட்சுமி உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் வீசிங் ப்ராப்ளம் வரும் நீ சாப்பிடக்கூடாது என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன் என சூர்யாவை திட்டுகிறார்.

பொய் சொல்வதில் மனோஜை மிஞ்சிய ரவி.. சிக்கி கொள்ளபோகும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

அடுத்து நான் காலையில் கௌதம் டிப் டாப் ஆக கோட் சூட் போட்டுக்கொண்டு முதல் நாள் சூர்யா ஆபிசுக்கு போகிறார்.. அங்கு வேலை பார்க்கும் பவித்ரா என்ற பெண் கௌதம் உடைய ரூமை காண்பித்து இதான் உங்க ரூம் சார் என்கிறார்.. பிறகு கௌதம் பவித்ராவிடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க எவ்வளவு நாளா இங்க வேலை செய்றீங்க என்று வழிகிறார்.. பிறகு பவித்ரா கௌதம் இடம் இந்த டிசைன் எல்லாம் சரியான்னு பாத்துட்டு மெயில் அனுப்பிடுங்க சார் என்று கேட்க..

நீ பண்ண டிசைன் எல்லாம் அழகா தான் இருக்கும் மெயில் அனுப்பிவிடு என சொல்கிறார் ஆனால் பவித்ரா எப்பவும் சூர்யா சார் தான் மெயில் பண்ணுவாரு அவர்கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க சார் என்று சொல்ல அதெல்லாம் சூர்யா கிட்ட கேட்க வேணாம் நீங்க அதை மெயில் பண்ணிடுங்க என கௌதம் சொல்கிறார் பிறகு சூர்யாவிடம் ஒருவர் போன் பண்ணி நீங்க அனுப்புன டிசைன் எனக்கு திருப்தி இல்ல..

அஜித், விஜய் தவறவிட்ட கதையை ஓகே சொல்லி நடித்த ஹீரோ.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.?

வேற யார்கிட்டயாவது தான் கேட்கணும் போல என்று சொல்ல சூர்யா நான் இன்னும் உங்களுக்கு டிசைன் அனுப்பவே இல்லையே யாரோ என்னை கேட்காமல் அனுப்பி இருக்காங்க ஈவினிங் குள்ள சரி பண்ணி அனுப்புறேன் சார் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு பவித்ரா என கோபமாக எழுந்து வருகிறார் சூர்யா இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது