அர்ஜுன் மூஞ்சில் கரியை பூசிய தமிழின் விசுவாசிகள்.! நேர்மை எப்பொழுதும் ஜெயிக்கும் டா – தமிழும் சரஸ்வதியும்.

Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் அசோசியேஷன் மெம்பெர் ஒருவருக்கு ஹார்ட் ஆபரேஷன் என்பதால் அனைவரையும் 25 ஆயிரம் பணம் புரட்ட சொல்கிறார். அதே போல் தமிழும் சரஸ்வதி கம்மலை அடகு வைக்க வருகிறார் ஆனால் இந்த கம்மலுக்கு 25,000 ரூபாய் கிடைக்காது எனக் கூற பிறகு எப்படியோ பேசி 25 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு அசோசியேஷன் ஆபீஸ் செல்கிறார்கள்.

மற்றொரு பக்கம் சரஸ்வதி இடம் கவரிங் தோடை வசூ கொடுக்கிறார் உடனே இதெல்லாம் நீங்க போட வேண்டாம் என்னோட தோடு போட்டுக்கோங்க நான் அதை போட்டுகிறேன் என வசு கூற அதெல்லாம் வேண்டாம் நான் இதையே போட்டுக்குறேன் நீ தோடு இல்லாம இருக்க கூடாது என பேசுகிறார் அப்ப நீங்க மட்டும் இருக்கலாமா என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது கோதை கேட்டு விடுகிறார் உன் பவுனுத்தோடு எங்க நீ எதுக்கு கவரிங் தோடு போடுகிறாய் என கேட்கிறார்.

அதற்கு ஏதேதோ சொல்லி மழுப்பா பிறகு தமிழ் மாமா வாங்கிக் கொண்டு போய் அடகு வைத்து விட்டார் ஹார்ட் ஆபரேஷனுக்கு 25 ஆயிரம் கொடுக்க அடகு வைக்க சென்றார் என கூறுகிறார்கள். உடனே கோதை நான் அவனை போய் பார்த்து பேசுகிறேன் என அசோசியேஷன் ஆபீஸ்க்கு செல்கிறார். அங்கு சென்ற கோதை தமிழிடம் பேசுவதற்காக முயற்சி செய்யும்பொழுது அதற்குள் வேறு ஒருவர் கூப்பிடுகிறார் உடனே கிளம்பி விடுகிறார்கள்.

அங்கு ஹார்ட் ஆபரேஷன் செய்யும் நபர் தமிழுக்கு மிக்க நன்றி சொல்கிறார் அது மட்டும் இல்லாமல் கோதைக்கும் நன்றி சொல்கிறார். ஆனால் இந்த நன்றி அனைத்தும் தமிழுக்கு மட்டுமே சேரும் எங்க கம்பெனியில் நடந்த பிரச்சனை உங்களுக்கு தெரியும் ஆனா இதெல்லாம் பொருட்படுத்தாமல் சரஸ்வதி தோட்ட அடகு வச்சு இந்த 25 ஆயிரம் பணத்தை கொண்டு வந்து உங்கள்ட்ட கொடுக்கிறார். இந்த மாதிரி தலைவர தான் நீங்க தேர்ந்தெடுத்து இருக்கீங்க அவருக்கு தான் நன்றி சொல்லணும் என பேசுகிறார்.

இந்த பிரச்சனை முடிந்தவுடன் பணம் வாங்குவதற்காக பைனான்சியர் ஆபீசருக்கு செல்கிறார் அங்கு ஆனால் அந்த ஆபீஸர் உள்ளேயே உட்கார்ந்து கொண்டு வெளியூர் போய்விட்டதாக தமிழிடம் கூற சொல்கிறார் இது அனைத்தும் அர்ஜுன் வேலை தான். பிறகு வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பணம் எப்படி ரெடி பண்ண முடியும் அந்த ஆர்டர் கண்டிப்பா நம்ம கையை விட்டு போய்விடும் என அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் வீட்டிற்கு வருகிறார் அர்ஜுன் வீட்டுக்கு வந்து பிச்சை எடுக்கிற நிலைமையில் தான் இருக்கீங்க இப்ப நான் கொடுக்கிறத வாங்கிக்கோங்க இத தவிர உங்களுக்கு வேற வழியே கிடையாது என ஏத்தி விடுகிறார்.

ஆனால் அர்ஜுனை ஒழுங்கா வெளில போயிடு கொலவெறியில் இருக்கேன் அடிச்சு கொன்னுடுவேன் என பேசுகிறார். அந்த சமயத்தில் கார்த்திக் அவர்களுக்கு கால் வருகிறது மெட்டீரியல் உடனே அனுப்புகிறேன் பணம் கட்டியாயிடுச்சு உங்க சார்பாக வேறொருவர் கட்டிவிட்டார் என கூறுகிறார் உடனே அதனை தமிழிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அசோசியேஷன் மெம்பர் அனைவரும் வந்து எங்களுக்கு ஒரு பிரச்சனைனா நீங்க வந்து உதவுறீங்க உங்களுக்கு ஒரு பிரச்சனைனா நாங்க உதவ மாட்டோம்மா நாங்க எல்லா பணத்தையும் கட்டிடோம் நீங்க உங்க வேலைய பாருங்க என்பது போல் கூறுகிறார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார் அர்ஜுன் மூஞ்சில் கரியை பூசியது போல் மூக்கை உடைத்துக் கொண்டு நிற்கிறார். நேர்மை எப்பொழுதும் அழியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இத்துடன் தமிழன் சரஸ்வதியும் சீரியல் இன்றைய எபிசோடு முடிகிறது.