சீச்சீ.! நைட்டு அப்படி நடந்துக் கிட்டீங்க.. சூர்யாவுடன் கொஞ்சி விளையாடும் மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha kalyanam Serial Promo : ஐஸ்வர்யா நம்ம கர்ப்பமாக இல்லை என்கிற விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் நம்மளை வீட்டை விட்டு அனுப்பிடுவாங்க அதனால சீக்கிரம் நான் கர்ப்பமாகியே வேண்டும் என கௌதம்காக பாலில் வசிய மருந்து கலந்து காய்ச்சி வைத்திருந்தார்.

ஆனால் அந்த பால் கைமாறி சூர்யாவிற்கு போய்விட்டது சூர்யாவும் அதனை குடித்துவிட்டு நைட்டு மகாவிடம் ரொமான்ஸ் பண்ணினார். அடுத்த நாள் காலையில் எழுந்து சூர்யா மகாவிடம் நீ எப்படி பெட்டுக்கு வந்த நைட்டு என்ன நடந்தது என்று கேட்க நீங்க தான் என்னை இழுத்து பெட்ல போட்டீங்க ஏதேதோ சொன்னீங்க என்று சொல்ல சூர்யா என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

OTT-யில் வெளியாகும் சந்திரமுகி 2.! இனி, நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி இருந்தா என கலாய்க்கும் ரசிகர்கள்..

ஆனால் மகா எல்லாத்தையும் சொல்லவில்லை பிறகு கௌதம் ஐஸ்வர்யா கல்யாணம் நல்லபடியாக முடிந்ததால் வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தில் உள்ள  எல்லோரும் திருப்பதி கோவிலுக்கு சென்று இருக்கின்றனர் சூர்யா மட்டும் எனக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு நான் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.

அதனால் மகாவும் கோவிலுக்கு போகவில்லை.. இந்நிலையில் மகா மற்றும் சூர்யா இருவர் மட்டும் வீட்டில் இருக்கின்றனர் இந்த நேரத்தில் ஆஹா கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் சூர்யா ஆபீசுக்கு கிளம்புகிறார்.. அப்பொழுது மகா நான் வீட்ல தனியா தான் இருக்கேன்.

நானும் உங்க கூட ஆபீசுக்கு வரேன் என்று கேட்க சூர்யா நீ வர வேண்டாம் என்று சொல்கிறார் பிறகு நைட்டு என்ன நடந்ததுன்னு போகும்போது உங்க கிட்ட சொல்றேன் என மகா சொல்வதும் சூர்யா உடனே சரி வா என்று மகாவையும் ஆபீசுக்கு கூட்டிட்டு போகிறார்..

ஆயுத பூஜை ஸ்பெஷலாக டிவி-யில் ஒளிபரப்பப்படும் புது திரைப்படங்கள்.! அட இந்த புது திரைப்படமும் உண்டா.. அப்போ டிஆர்பி.?

போற வழியில் சூர்யா நைட் என்ன நடந்தது என்று கேட்க நான் அப்புறம் சொல்றேன் என மகா சொல்லிவிட்டார்.. ஆபீஸிலும் போயி நைட்டு என்ன நடந்தது என்று சொல்லு என கேட்க நான் மறந்துட்டேன் என மகா சொல்கிறார் அதனால் கோபம் அடைந்த சூர்யா மகாவை நீ  தனியா வீட்டுக்கு வா நான் உன்னை அழைச்சிட்டு போக மாட்டேன் என்று சொல்ல நீங்க அழைச்சிட்டு போலனா எனக்கு வழி தெரியாதா?

என்று ஆட்டோவை நிப்பாட்டி வீட்டுக்கு போக மகா கேட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சூர்யா அந்த ஆட்டோ டிரைவரிடம் நீ அழைச்சிட்டு போயிடுவியா என்று கேட்க நீங்க வாங்கமா நான் அழைச்சிட்டு போறேன்னு மகாவை அந்த ஆட்டோ டிரைவர் அழைத்துக் கொண்டு போகிறார்.