குட்டி போட்ட பூனை மாதிரி மகா பின்னாடியே அலையும் சூர்யா.! கேசரியில் உப்பை அள்ளிபோட்ட சூர்யா… நடக்கபோவது என்ன..

ஆஹா கல்யாணம் சீரியல் இன்றைய எபிசோடில்  சூர்யா மகாவின் பின்னாடியே சென்று கொண்டிருக்கிறார். அப்போது விஜய் தலையில் கட்டு போட்டுக்கொண்டு வீட்டுக்கு வருகிறார் அதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிடுகின்றனர். விஜய் உனக்கு என்ன ஆச்சு என அனைவரும் பதறுகின்றனர். அதற்கு விஜய் காயம் சின்னது தான் கட்டு தான் பெருசு ஒன்னும் பயப்படாதீங்க என சொல்லுகிறார்.

வீட்டில் இருப்பவர்கள் எப்படி உனக்கு காயம் ஆச்சு என கேட்கின்றனர். அதற்கு அவர் உண்மையை சொன்னால் மகாவிற்கு பிரச்சனையாகி விடும் என்பதற்காக பைக்ல போகும்போது ஒரு சின்ன ஆக்சிடென்ட் என பொய் சொல்கிறார்.

குட்டி போட்ட பூனை மாதிரி மகா பின்னாடியே அலையும் சூர்யா.! கேசரியில் உப்பை அள்ளிபோட்ட சூர்யா… நடக்கபோவது என்ன..

அனாமிகா பதட்டத்துடன் வீட்டுக்குள் வருகிறார். விஜய் உனக்கு என்ன ஆச்சு? என்ன இவ்வளவு பெரிய கட்டு, பார்த்து வண்டி ஓட்ட மாட்டீங்களா என மற்றவர்கள் இருப்பதையும் மறந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் அந்த பொண்ணையே உத்து பார்க்கின்றனர். பிறகு விஜய் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த பொண்ணு தான் அனாமிகா நான் எழுதின கவிதையை புத்தகமா  பப்ளிஷ் பண்ணவங்க என அறிமுகம் செய்து வைக்கிறார்.

பிறகு விஜய் அனாமிகாவை கூப்பிட்டுக் கொண்டு அவரது ரூமை சுத்தி காமிக்கிறார். அப்போது ரெண்டு பேரும் பேசிக் கொள்கின்றனர். அந்த சமயத்தில் மகா அனாமிகாவிற்காக கேசரி செய்யப்போகிறாள் .அப்போது பின்னாடியே சூர்யாவும் செல்கிறார்.

மகா சமைக்கும் போது அவருக்கு தேவையான அனைத்து உதவியை யும் சூர்யா செய்கிறார் மகாவை சமாதானப்படுத்த சூர்யா பலமுறை முயற்சிக்கிறார் ஆனால் எதற்குமே மகா மயங்கவில்லை .கேசரியில் சர்க்கரையை போடுவதற்கு பதிலாக சூர்யா சர்க்கரை என நினைத்து உப்பை அள்ளி போட்டு விடுகிறார். அது தெரியாமல் மகா கேசரி எடுத்துக்கொண்டு அனைவருக்கும் கொடுக்கப் போகிறார்.

தமிழைப் போட்டு தள்ளி அந்த பழியை தூக்கி மேக்னா மீது போட போகும் அர்ஜுன் மற்றும் கலிவரதன்.! பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

சூர்யா சர்க்கரை டப்பாவை எடுத்து பார்க்கும்போது உப்பு என எழுதி இருக்கிறது அய்யய்யோ எப்படியாவது இதை தடுக்கணுமே   என மஹாவின் பின்னாடியே சொல்கிறார். உப்பு போட்ட கேசரியை அனாமிகா சாப்பிடக்கூடாது என்பதற்காக சூர்யா டயட் அது,இது என சொல்லி அந்த பொண்ணை சாப்பிடாமல் தடுக்கிறார். 

அதனால் அந்த பொண்ணும் ஸ்வீட் வேண்டாம் என சொல்லிவிடுகிறது. உடனே மகா வெய்ட் பண்ணுங்க என சொல்லிவிட்டு ஒரு தட்டில் புடவை, பூ, பழம்  வைத்து கொடுக்கிறார். அனாமிகா பாட்டியின் காலில் விழுந்து கும்பிட்டு விட்டு அந்த தட்டை வாங்கி கொள்கிறார். பிறகு அனைவரிடமும் போயிட்டு வருகிறேன் என்று சொல்கிறார். அதோட மட்டுமல்லாமல் விஜய் பார்த்து பத்திரமா வண்டி ஓட்டுங்க என சொல்கிறாள். உடனே வீட்டில் உள்ள அனைவரும் ஆமா விஜய் பார்த்து பத்திரமா வண்டி ஓட்டுங்க என கோரசாக கிண்டலாக சொல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.