6 லட்சம் பணம் தராமல் சின்னத்திரை நடிகையை ஏமாற்றிய ஜீ தமிழ் தொலைக்காட்சி.! ஆத்திரத்தில் அவர் அளித்த பேட்டி..

பொதுவாக சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் பல நடிகைகள் குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சின்ன திரையில் அறிமுகமாவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் சமீபத்தில் அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும் இந்த சீரியல் நூறாவது எபிசோடை கடந்துள்ள நிலையில் சமீபத்தில் இந்த சீரியல் குழுவினர்கள் செட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்கள் இந்த சீரியல் கள்ளக்காதல் கதைகள் இருந்து வருவதால் இந்த சீரியலுக்கு சற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது மாறன் மனைவி சாருமதி அகிலன் என்பவரை கள்ளத்தனமாக காதலித்து வருகிறார். அகிலன் ஆதிரா என்பவரை காதலிப்பதாக கூறி திருமணம் நடக்கும் மேடை வரை இவர்களுடைய திருமணம் செல்கிறது ஆனால் கடைசியில் சாருமதி அகிலனும் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர்.

குடும்பத்தினர் அனைவரும் ஆதிராவுக்கும் மாறணுக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள் இதுதான் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த வரும் மனிஷா அஜித் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஏற்கனவே ஒரு சீரியலில் நடித்துள்ளார். ஆனால் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார் அதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி பிரச்சினை செய்து சீரியல் இருந்து விலகி விடுவார் என்றும் கூறுகிறார்.

தற்பொழுது கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் இருந்து விலகுவதாகவும் பல குற்றச்சாட்டங்களை சீரியல் குழுவினார்கள் வைத்தனர் இதற்கு பதில் அளிக்கும் வகையில் மனிஷா அஜித் விளக்கம் கொடுத்துள்ளார்.அவர் கூறுகையில் குழுவினரின் மேல் இவர் அதிக குற்றச்சாட்டு வைத்துள்ளார் அதாவது நான் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் நடிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்து எனக்கு சம்பள பாக்கி இருந்தது எனவே என்னிடம் வந்து புரொடியூசர் பணம் பற்றாக்குறையாக இருக்கிறது என முழு தொகை சம்பளத்தை அனைவரும் வாங்கிக் கொள்கிறார்கள் என்று என்னிடம் கூறினார்.

manisha
manisha

எனக்கு அவரை பார்க்க பாவமாக இருந்ததால் பாதி பணம் இப்பொழுது தாங்க மீதி பணத்தை அப்புறமா வாங்கிக்கிறேன் என கூறினேன் அவரும் சரி என்று சொல்லிவிட்டார் பிறகு சிறிது நாட்கள் கழித்து நான் எனது சம்பளத்தொகையை கேட்கும்பொழுது இன்னும் சேனலில் இருந்து பணம் வரவில்லை வந்தவுடன் தருகிறேன் என கூறியிருந்தார் சேனலில் சென்று கேட்டதற்கு அனைவருக்கும் செட்டில் செய்து விட்டோம் என கூறினார்கள். நிறத்தில் அப்போ எனக்கு கொஞ்சம் கொஞ்சம் பணத்தை கொடுத்தார்கள்

மேலும் அலையவிட்டார்கள் இதனால் 100 டிகிரிக்கு மேல் எனது காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது இந்த நேரத்தில் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு மெயில் அனுப்பி சொல்லிவிட்டார்.ஆனால் எனக்கு பதில் மேலாக நாளைக்கு ஷூட்டிங் இருக்கிறது என கூறி இருந்தார்கள். எனக்கு ஆறு லட்சம் சம்பளம் தர வேண்டும் ஆனால் இதுவரையிலும் ஒரு ரூபாய் கூட தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Comment