செம்பருத்தி சீரியலால் மற்றொரு சீரியலை பாதியிலேயே நிறுத்திய ஜீ தமிழ் தொலைக்காட்சி.!

சமீப காலங்களாக சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.ஏன் என்றால் டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக புதிய சீரியல்களையும் ,புதுமுக நடிகர் நடிகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள் .

அதோடு மட்டுமல்லாமல் 2k கிட்ஸ்களை கவர வேண்டும் என்பதற்காக ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும் வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ். சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு அடுத்ததாக இந்த தொலைக்காட்சி தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள் மேலும் அந்த சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்து வருகிறது ஆனால் ஒரு சில சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது இன்னும் சில சீரியல்கள் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் பல வருடங்களாக சூப்பர் ஹிட் வெற்றி வரும் சீரியல் தான் செம்பருத்தி இந்த சீரியல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைகிறது மேலும் இந்த சீரியலின் வெற்றி விழா கொண்டாட்டமும் நடந்துள்ளது. செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் டப்பிங் சீரியல் ஒன்றும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

iniya iru malarkaL
iniya iru malarkaL

அதாவது இனிய இரு மலர்கள் என்ற தொடர் தான் இந்த சீரியல் இரவு 11 மணி என்று ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது பாதியிலேயே நிறுத்தப்பட்ட உள்ளதாம். இந்த தொடருக்கு சின்ன பூவே மெல்ல பேசு என்ற பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று பாதியிலேயே நிறுத்தப்படவுள்ளது.

Leave a Comment