தாலி கட்டிய பார்த்திபனை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் ரஜினி.! தலை குனிந்து நிற்கும் பார்த்திபன்..

சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு புதிய ஏராளமான செயல்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள் மேலும் டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக பல ரியாலிட்டி ஷோக்கள் நல்ல கதைய அம்சமுள்ள சீரியல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் ஜீ தமிழ். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்பொழுது புதிதாக அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் ரஜினி.

இந்த சீரியலில் கதாநாயகியாக ஸ்ரேயா அஞ்சான் நடித்து வருகிறார். இவர் தனது குடும்பத்திற்காக தனது அனைத்து ஆசைகளையும் மறைத்து அவர்களின் நலனுக்காக வாழ்ந்து வரும் நல்ல ஒரு பெண்ணாக இருந்து வருகிறார். இவருக்கு பார்த்திபனின் மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது ஆனால் அனிதாவிற்கு சத்தியம் செய்து கொடுத்ததால் தனது காதலை மறைத்து இருந்து வருகிறார்.

பிறகு பார்த்திபன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு ஒப்புக்கொள்கிறார். இந்நிலையில் தற்பொழுது பார்த்திபனுக்கு திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ரஜினியும் அவர் கூட திருமணத்திற்கு தனது முழு மனதுடன் கலந்து கொள்கிறார்.

இவ்வாறு தாலி கட்ட நேரத்தில் பார்த்திபன் ரஜினிக்கு தாலியை கட்டி விடுகிறார். அனைவரும் அதிர்ச்சியடைந்து பார்க்க அனிதாவிற்கு கோபம் தாங்க முடியவில்லை. இதன் காரணமாக பார்த்திபனிடம் சண்டை போடுகிறார். பிறகு பார்த்திபன் கூடிய விரைவில் நானும் ரஜினியும் சேர்ந்து வாழ்வோம் என சவால் விட்ட ரஜினியை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு செல்கிறார்.

https://youtu.be/qugoQpyrlB4

Leave a Comment