தான் இறந்தாலும் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜீ தமிழ் பிரபலம்.! ஜெயிலர் மூலம் நிறைவேறிய ஆசை

Actor Rajinikanth: சினிமாவை பொறுத்தவரை ஏராளமான இளம் பிரபலங்கள் முதல் முன்னணி பிரபலங்கள் வரை அனைவரும் ரஜினியின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று விரும்பி வருபவர்கள் இருக்கிறார்கள். அப்படி தற்பொழுது இறப்பிற்கு பிறகு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஜெயிலர் படத்தின் மூலம் ஜீ தமிழ் பிரபலத்திற்கு நிறைவேறிவுள்ளது அது குறித்து பார்க்கலாம்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் படுமோசமான விமர்சனங்களை பெற்றது எனவே வெற்றி திரைப்படத்தினை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருந்து வந்தார். அந்த வகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படம் நேற்று வெளியானது.

இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது தலைவர் அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரையும் கெத்து காமித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து கேரக்டர்களும் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றுள்ளது.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் தன்னுடைய அசத்தலான நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் தான் டான்சர் ரமேஷ். இவர் ஜீ தமிழ் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார். மேலும் இதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.

இவ்வாறு பிரபலமான இவருக்கு பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்ற நிலையில் அஜித்தின் துணிவு படத்தில் சிறு கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே இவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

இவ்வாறு ஜெயிலர் படத்தினை பார்த்த ரமேஷ் குடும்பத்தினர்கள் இப்பொழுது ரமேஷ் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார் என கண்கலங்கி வருகின்றனர். ஏனென்றால் ரமேஷ் ரஜினியுடன் நடிக்கிறோம் என மிகவும் மகிழ்ச்சி அடைந்தாராம் ஆனால் அதனை பார்க்க முடியாமலே போய்விட்டது என வேதனை அடைந்துள்ளார்கள்.

Leave a Comment