எந்த ஒரு தொலைக் காட்சிகளிலும் எந்த ஒரு செயலிலும் நடக்காத விஷயம்.! பிரமாண்டத்தின் பிரம்மாண்டம்.! ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான ரசிகர்களை கவரும் வகையில் சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி,கலர்ஸ் தமிழ் இந்த நான்கு தொலைக்காட்சிகள்  தான் பல நல்ல சீரியல்களை இயக்கி TRP- யில் கலக்கி வருகிறார்கள்.

அந்தவகையில் ஜீதமிழ் தொடர்ந்து வித்தியாசமான கதை உள்ள புதிய நடிகர் மற்றும் நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது மிகவும் வித்தியாசமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள சீரியல் நீ nதானே எந்தன் பொன்வசந்தம்.

இந்த சீரியல் 40 வயது ஆணுக்கும் 20 வயது இளம் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு 40 வயது ஆணும் 20 வயது இளம்பெண்ணும் காதலித்தால் இப்படிதான் இருக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்கள்.

அந்தவகையில் இந்த சீரியலில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடித்து வருகிறார். ஜெய் ஆகாஷ் இதற்கு முன்பு இவர் இளம் வயது இருக்கும் பொழுது சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோடியாக தர்ஷனா அசோக் என்ற புதுமுக நடிகை அறிமுகமாகியுள்ளார்.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது உள்ள எபிசோடுகளில் எப்பொழுது கதாநாயகர் கதாநாயகியிடம் தனது காதலை சொல்வார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கதாநாயகன் தனது காதலியை முதன் முதலில் ஹெலிகாப்டரில் அழைத்து சென்று தனது காதலை சொல்ல உள்ளார்.

இந்தக் காட்சி நாளைக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் ஹெலிகாப்டர் உட்பட இன்னும் படப்பிடிப்புகள் எப்படி நடக்கிறது என்ற வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version