முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு அப்பவே கோர்ட் சூட் போட்டுக்கிட்டு மாஸா வந்த யுவன்.! பழைய புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தயாரிப்பாளர்.

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவையும் தாண்டி பல்வேறு மொழிகளுக்கு இசை அமைத்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் மேலும் தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் இசை அமைத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் இவரை தொடர்ந்து கார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பவதாரணி மூன்று வாரிசுகளும்  சினிமாவில் இசை அமைத்து வருகின்றனர் இவர்கள் மூவருமே சிறப்பாக பணி ஆற்றுவதால் இந்த குடும்பமே இசை குடும்பமாக மாறி உள்ளது.

ஷங்கர் ராஜாவின் அண்ணன் கார்த்திக் ராஜா அப்பாவிடம் இசை பணியை தொடர்ந்து செய்து வருகிறார் மகள் பவதாரணி மைடியர் குட்டிசாத்தான் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார் இவர்கள் இருவரும் பணியாற்றி  சிறப்பாக வந்தாலும்  இவர்களை விட இவன் சங்கர் ராஜா தான் உச்சியில் இருக்கிறார்.

யுவன் பல்வேறு முன்னணி நடிகரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருவதோடு அந்த இசையில் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கட்டி இழுத்து உள்ளது இதனால் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக யுவன்சங்கர்ராஜா உருமாறி உள்ளார் இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

அஜித் படத்தில் இவர் போடும் தீம் மியூசிக் வேற லெவல் இருப்பதோடு பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டையை கிளப்புகின்றன இதனால் தற்போது இவன் சங்கர் ராஜாவுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு இருக்கிறது மேலும் இவர் அஜித்துடன் இணைந்து தீனா, ஏகன், மங்காத்தா போன்ற படங்களுக்கு இசையமைத்த நிலையில் தற்போது அஜித்தின் வலிமை படத்திற்கு இசையமைத்து உலர் என்பது கூடுதல் தகவல்.

யுவன் சங்கர் ராஜா முதன் முதலில் இசை அமைக்க அறிமுகமான படம் அரவிந்தன் . இந்த படத்தின்  தயாரிப்பாளர் சிவா முதலில் யுவனின் சில ஆல்பங்களை கேட்டுவிட்டு படத்திற்கான டிரைலர் இசையை போட சொல்லி இருக்கிறார் அது சிறப்பாக வந்ததை அடுத்து அவருக்கு இந்த திரைப்படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார்.

முதல் இசை வெளியீட்டு விழாவின் போது எடுத்த புகைப்படத்தை தற்போது தயாரிப்பாளர் சிவா அவர்கள் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment