மதுபோதையின் உச்சம் பின் வழியாக குவாட்டர் பாட்டிலை நுழைத்த இளைஞன். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து பதறிய மருத்துவர்கள்

29 வயது இளைஞர் ஒருவர் குடிபோதையின் உச்சத்தில் மது பாட்டிலை தனது ஆசனவாய் மூலம் தானே வயிற்றுக்குள் நுழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்திற்கு அருகில் உள்ள நாகூர் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவருக்கு வயது 29 மது போதைக்கு அடிமையாக இருந்தவர் இவர், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் திடீரென திறக்கப்பட்ட நிலையில் தினந்தினம் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் பக்கிரிசாமி.

இப்படி தினம் தினம் குடித்து வந்ததால் ஒரு காலகட்டத்தில் அளவுக்கு மீறி மது குடித்த பக்கிரிசாமி மதுபோதையில் உச்சத்திற்கே சென்றார், அதனால் கடைசி குவாட்டர் பாட்டிலை எங்கே பாதுகாப்பாக வைப்பது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார் பின்பு குடிபோதையில் பாட்டிலை மறைத்து வைக்க தனது ஆசனவாயில் சொருகி உள்ளார்.

மது பாட்டிலை சொருகிக்கொண்டு குடிபோதையில் ஆட்டம் போட்டதால் குவாட்டர் பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுப்பகுதிக்கு சென்றது இதனால் அடுத்த நாள் கடும் வயிற்று வலிக்கு உயிருக்கு போராடிய நிலையில் பக்கிரிசாமி இருந்துள்ளார் உடனே உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையில் பக்கிரிசாமியை சேர்த்தார்கள்.

அப்பொழுது பக்கிரிசாமியின் வயிற்றை ஸ்கேன் செய்த பொழுது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் ஏனென்றால் பக்கிரிசாமி வயிற்றில் குவாட்டர் பாட்டில் இருந்துள்ளது அதன் பிறகு அறுவை சிகிச்சை இல்லாமல் இனிமா கொடுத்து இரண்டு மணி நேரம் கடும் போராட்டத்திற்குப் பிறகு பாட்டிலை வெளியே எடுத்து பக்கிரிசாமியை பத்திரமாக மீட்டார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment