8 வயதிலேயே பாலியல் தொல்லை.. வெளியே சொல்ல முடியாமல் கதறிய 90 -ஸ் நடிகை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

80,90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்தவர் நடிகை குஷ்பு.  இவர் புதுமுக நடிகர்கள் தொடங்கி டாப் ஹீரோக்களான ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டார் தொடர்ந்து தமிழில் வெற்றி பெற்ற இவர் பிற மொழிகளிலும் வாய்ப்பை கைப்பற்றிய அங்கேயும் வெற்றி மேல் வெற்றியை குவித்தார்.

இப்படி சினிமாவே வாழ்க்கை என ஓடிக் கொண்டிருந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யின் மீது காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டனர் தற்பொழுது இருவருக்கும் இரு மகள்கள் இருக்கின்றனர். இப்பொழுதும் நடிகை குஷ்பு ஒன்று, இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பெரிதும் அரசியலிலேயே ஆர்வம் காட்டி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய இளம் வயதில் நடந்த சம்பவம் குறித்து நடிகை குஷ்பு வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. தன்னுடைய அப்பா தன் அம்மாவை அதிகம் அடிப்பார் என்றும், சிறுவயதில் ஆண் பிள்ளையோ.. பெண் பிள்ளையோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அதனால் ஏற்படும் பயம் அவர்களின் வாழ்க்கையை முழுவதும் துரத்திக் கொண்டு இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய.. ஒரு ஆண்மகன் கட்டின மனைவியை அடிப்பது பெற்ற குழந்தைகளை பாலியல்  கொடுமை செய்வதெல்லாம் பிறப்புரிமை என்று நினைத்திருக்கலாம்..  தனது 8 வயது இருக்கும் பொழுது அந்த வயதில் தன்னுடைய அப்பாவால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன் அதை எதிர்த்து கேள்வி கேட்க  தன்னால் முடியவில்லை ஏனென்றால் தான் ரொம்ப சின்ன பொண்ணு என்றும் அம்மாவிடம் கூறினால் நம்புவார்களா.? என்று தெரியவில்லை..

காரணம் அந்த அளவிற்கு என் அம்மா கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்லி வாழும் ஒரு ஜீவன் எனவும் அதனால் அவரிடம் சொல்லவில்லை..  அவரை எதிர்த்து கேள்வி கேட்க எனக்கு 15 வயதில் தான் தைரியம் வந்தது அப்புறம் தனக்கு 16 வயது ஆன பொழுது தங்களை விட்டு பிரிந்து சென்றார் அதன் பின்னர் அடுத்த வேலை சோத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் நின்றோம் என தெரிவித்தார்.

Leave a Comment

Exit mobile version