பீஸ்ட் படம் குறித்து முதல் முறையாக பேசிய யோகிபாபு – கூர்கா படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் உண்டா.. என்ன சொன்னார் தெரியுமா.?

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது படம் வெளிவர இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருப்பதால் ரசிகர்கள் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர் பீஸ்ட் படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

மறுபக்கம் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் நெல்சன் தொடர்ந்து பேட்டி கொடுத்து அசத்தி வருகின்றனர் குறிப்பாக இயக்குனர் நெல்சன் விஜய் மற்றும் படம் குறித்து பேரவையில் பேசிவருகிறார் அப்படி அண்மையில் பேட்டி ஒன்றில்  பீஸ்ட் படம் நிச்சயம் நீங்கள் எதிர்பார்ப்பது போல சாதாரணமாக இருக்காது.

ஹாலிவுட் ஸ்டைலில் ஜேம்ஸ் பாண்ட் படம் போல வித்தியாசமாக இருக்கும் என கூறி அதிர வைத்தார். தெலுங்கில் ஒரு பிரஸ்மீட்டில் பூஜை ஹெக்டே கூட ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார் அதாவது இந்த படத்திற்கு ஏன் பீஸ்ட் என பெயர் வைக்க காரணம் என கேட்டனர்.

அதற்கு அப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜய் நடித்து உள்ளார் அதனாலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிச்சயம் இந்த படம் சிறப்பாக இருக்கும் என கூறினார் இப்போது பேட்டி ஒன்றில் காமெடி நடிகர் யோகிபாபு இந்த படம் குறித்து ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அதில் அவர் சொன்னது விஜயின் மற்ற படங்களைப் போலவே இந்தப் படமும் தாறுமாறாக இருக்கும் என கூறி அதிர வைத்தார். மேலும் அவரிடம் பீஸ்ட் படம் கூர்க்கா படம் போல இருக்குமா என கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

 

Leave a Comment