“மாநாடு” படத்தில் ஒய் ஜி மகேந்திரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேற நடிகராம்.? பேட்டியில் சொன்ன வெங்கட் பிரபு.

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகர் சிம்பு தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால்  படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  முதலில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்திலும் சிறப்பாக நடித்து முடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குகிறது.

மேலும்  ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் வரை அனைவரையும் இந்த படம் கவர்ந்து இழுத்துள்ளது. மாநாடு படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஏ. சந்திரசேகர் ஒய்ஜி மகேந்திரன் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். மாநாடு திரைப்படம் இதுவரை 70 கோடிக்கு மேல் அள்ளி புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இதனால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தில் ஒய்ஜி மகேந்திரன் கேரக்டர் ரசிக்கும்படி இருந்தது அந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடிகை இருந்தது வேறு ஒரு பிரபலமான தற்பொழுது தகவல் ஒன்று உலாவருகிறது . அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை இருந்தது மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் என தெரியவந்துள்ளது.

இவர்தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதனை இயக்குனர் வெங்கட்பிரபு ஒரு இண்டர்வியூ ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இத்தனை அறிந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் ரசிகர்கள் ரொம்ப வருத்தப்பட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment