கே.ஜி.எஃப் 3 திரைப்படத்தை முடித்துவிட்டு யாஷ் எடுத்த புதிய முடிவு.. என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஒரு தரமான திரைப்படத்தை கொடுத்து தமிழ் மக்களிடையே இடம் பிடித்த நடிகர் தான் யாஷ் இவர் கே.ஜி.எஃப் படத்தின் மூலம் தனது முகத்தை ரசிகர்களுக்கு பதிய வைத்தார். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் நன்றாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் எடுத்து கடந்த ஆண்டு வெளியானது.

வெளியான கே.ஜி.எஃப்2  திரைப்படத்திற்கு மக்கள்கள் நல்ல வரவேற்பு தந்தது மட்டுமல்லாமல் இப்படம் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து விட்டது.மேலும் கே.ஜி.எஃப் 3 எப்பொழுது வெளியாகும் என்றுதான் ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.

ஆம் அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.மேலும் யாஷ் தற்பொழுது ஒரு முடிவு எடுத்துள்ளாராம் ஆம் அந்த முடிவு என்னவென்று கேட்டால் பாலிவுட் திரையுலகில் கதாநாயகனாக என்ட்ரி கொடுக்க போகிறாராம். இதற்காக கதையும் கேட்டு முடிவும் செய்து விட்டாராம்.

கூடிய சீக்கிரத்தில் ஹிந்தி படத்தில் தான் என்ட்ரி கொடுக்க தயாராக இருக்கிறார் எனவும் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.ஆனால் கே.ஜி.எஃப்3 திரைப்படத்தை முடித்துவிட்டு தான் பாலிவுட் பக்கம் செல்ல இருக்கிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தால்.

kgf
kgf

மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என ரசிகர்களும் கூறி வருகிறார்கள். கே.ஜி.எஃப் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை விட மூன்றாம் பாகம் மிகவும் பயங்கரமாக இருக்கப் போகிறது என ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Leave a Comment