நடிகை சமந்தாவுக்காக மிக பிரம்மாண்ட செட் போட்ட யசோதா படக்குழு – அதற்கு மட்டுமே இவ்வளவு கோடியா..

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு உள்ளார். ஆரம்பத்தில் நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் தற்போது சிறப்பான  கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை தேர்ந்தெடுத்து நடிக்கும்  மனநிலைமைக்கு மாறி உள்ளார்.

அது அவருக்கு தற்போது வெற்றியையும் கொடுக்க ஆரம்பித்துள்ளது அந்த வகையில் புஷ்பா திரைப்படத்தில் இவர் ஒ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டது அந்தப் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். மேலும் ரசிகர்களும் சமந்தாவை புகழ்ந்து தள்ளினார். அதனை தொடர்ந்து  நடிகை சமந்தா கையில் தற்போது 2, 3 திரைப்படங்கள் இருக்கின்றன.

முதலாவதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல காதல். அதை தொடர்ந்து சமந்தா யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. தற்பொழுது நடிகை சமந்தா யசோதா திரைப்படத்தில் நடித்துவருகிறார் புதுமுக இயக்குனர் ஹரி ஹரீஷ் என்பவர் எடுத்து வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பிரம்மாண்ட முறையில் நடந்து வருகிறது. பிரம்மாண்ட நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 14 நாட்களுக்கான படப்பிடிப்பு எடுக்க முதலில் படக்குழு முடிவு எடுத்தது. ஆனால் அது நடக்காத காரியமாக போனதால் உடனடியாக யசோதா படக்குழு மூன்று கோடி ரூபாய் பொருட்செலவில் ஒரு பிரமாண்ட நட்சத்திர ஹோட்டல் செட்டப் ஒன்றைக் போட்டு உள்ளது.

இது எல்லாம் நடிகை சமந்தாவுக்கு செய்துள்ளதாம். காரணம் சமந்தாவின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருப்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யப்படுகிறது ரெடியாக இருப்பதாக தெரியவருகிறது. இந்த திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

yashoda
yashoda
yashoda
yashoda

Leave a Comment