யாஷிகா பயணித்த கார் நள்ளிரவில் விபத்து.! சம்பவ இடத்தில் ஒருவர் பலி.! யாஷிகாவுக்கு என்ன நடந்தது தெரியுமா.? விவரம் இதோ.

தமிழ் சினிமாவில் மாடலிங் மற்றும் கவர்ச்சி நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் வாட்டசாட்டமாக இருந்த நடிகை யாஷிகா ஆனந்த் துக்கு தமிழ் சினிமா உலகில் கவர்ச்சியான ரோல்களை கொடுத்து அழகு பார்த்தது. அதிலும் தனது திறமையை காட்டியதால் யாஷிகா ஆனந்த்துக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது சல்பர் மற்றும் கடமையை செய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மேலும் தொடர்ந்து பல வித்தியாசமான திரைப்படங்களை தன்வசப்படுத்தி உள்ளதால் யாஷிகாவின் நடிப்பை பார்க்க தற்போது ரசிகர்கள் கூட்டம் கியூவில் நிற்கின்றனர்.

கவர்ச்சியை காட்டி வந்த இவர் தற்போது வித்தியாசமான ரோல்களில் நடிக்க உள்ளதால் ரசிகர்களின் வரவேற்பு தற்போது தமிழ் சினிமாவில் அதிகரித்து உள்ளது இது இப்படியிருக்க சின்னத்திரையிலும் அவ்வபொழுது தலை காட்டுவதால் ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் கண்ட்ரோலில் வைத்துள்ளார் என்று கூறவேண்டும்.

இவர் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து முரட்டு சிங்கள் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியது.

அவருடன் பயணித்த தோழி வள்ளி செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் யாஷிகா மற்றும் அவருடன் உடன் பயணித்த இரண்டு நண்பர்கள் உட்பட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை அறிந்த யாஷிகா ரசிகர்கள் அவர் மருத்துவமனையில் இருந்து மீண்டு வர தற்போது அவருக்கு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Leave a Comment