ஆப்ரேஷன் செய்து கொண்ட பிறகும் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் யாஷிகா.! ஏன் தெரியுமா.? வைரல் நியூஸ்.

சினிமா துறையில் வெற்றியைக் காணும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகளையும் தாண்டி அவ்வபோது நிகழ்ச்சிகளிலும், பார்ட்டிகளில் கலந்து கொள்ள அதிக அழைப்புகள் வரும் அதை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் மட்டுமே  சினிமாவில் சர்ச்சை இன்றி நீண்ட காலம் பயணிக்க முடியும்.

அதேசமயம் தன்னை சரியாக பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது ஆனால் சமீபகாலமாக இளம் நடிகைகள் ஓரிரு திரைப்படங்களில் ஹிட் கொடுத்து விட்டால் பெரிய நடிகை என்பது போல நினைத்துக்கொண்டு உலாவிவருகின்றனர்.

அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து பின் சினிமாவில் என்ட்ரி ஆன யாஷிகா தொடர்ந்து கவர்ச்சி மற்றும் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததால் அனைத்து தரப்பட்ட மக்களையும் ரசிகர்களையும் ஈஸ்ஸியா கவர்ந்தார்.

இப்படி பயணித்துக் கொண்டிருந்த இவர் சமீபத்திய பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டார் அதை முடித்த பிறகு  ஆண் நண்பர்கள் மற்றும் தனது தோழியுடன் சென்னையை நோக்கி புறப்பட்டார் யாஷிகா. மகாபலிபுரம் அருகே அந்த கார் விபத்துக்குள்ளானது விபத்தில் அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் யஷிகாவுக்கு பலத்த அடிபட்டது.

அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது 2, 3 ஆபரேஷன்கள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளார் மேலும் அவர் ஆறு மாதங்கள் வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் ஆனால் அவர் வீட்டுக்குச் செல்லாமல் மாறுதலாக செவிலியர் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார் என சமீபத்தில் கூறியுள்ளார்.

அதற்கு முக்கிய காரணம் யாஷிகா வீட்டில் அவரது தோழியை கடைசியாக பார்த்து இருந்தாராம் மீண்டும் அங்கு சென்றால் பவானியின் ஞாபகம் வரும் என்பதால் தற்போது செவிலியர் வீட்டிலேயே தங்கி எப்பொழுதும் என்ன உணவு சாப்பிடுவாரோ அதே உணவை தான் தற்போதும் சாப்பிட்டு வருகிறாராம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment