யாஷிகா, ரிச்சர்ட் காதல் குறித்து முதன்முறையாக வாய் திறந்த அவரின் அம்மா.!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஆவார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ஷாலினிக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற சகோதரரும் இருக்கிறார்கள். அந்த வகையில் ஷாமிலி அஞ்சலி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.

மேலும் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமான நிலையில் அதன் பிறகு சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார். இவரை தொடர்ந்து ரிச்சர்ட் ரிஷி காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

என்னதான் இவர் சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக இவருக்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ரதாண்டவம் படத்தில் இவருடைய சிறந்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் இந்த படத்தில் எதிராக பலரும் குரல் கொடுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இதனை அடுத்து மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் இவர் நெருக்கமாக இருக்கும் ஏராளமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எனவே இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இதற்கு யாஷிகா ஆனந்தின் அம்மா விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது யாஷிகா ஆனந்த் சமீபத்தில் ரிச்சர்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் இது தொடர்பாக யாஷிகா அம்மாவிடம் கேட்ட பொழுது அவர் கூறுகையில், நானும் தினமும் இது போன்ற செய்திகளை சமூக வலைதளம் உள்ளிட்ட அவற்றில் பார்த்து வருகிறேன்.

ரிச்சர்ட் யாஷிகா இருவரும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட ஸ்டில்களை இருவரும் பகிர்ந்து வருகிறார்கள். அதை வைத்து ஏது ஏதோ எழுதுகின்றனர் ஆனால் எதுவும் உண்மை இல்லை அந்த படம் குறித்த தகவல்கள் வெளிவரும்போது தான் எல்லோரும் நம்புவீர்கள் என கூறியுள்ளார்.

Leave a Comment