ரசிகர்களுக்கு காட்டியது போதும்.. கல்யாணத்துக்கு ரெடியான யாஷிகா.? புதிய பதிவால் அதிர்ச்சி.

சினிமா துறையில் சமீபகாலமாக மாடலிங் நடிகைகள்தான் ஆட்சி செய்து வருகின்றனர். அப்படி மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். மேலும் சோஷியல் மீடியாவில் இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் மூலம் அதிகளவு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகையாகும்.

இவர் தமிழில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பின்பு ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் நடித்த படங்களிலும் அதிகளவு கவர்ச்சியை காட்டி நடித்ததால்  ரசிகர்கள் மனதில் ஒரு கவர்ச்சி குயினாக வலம் வருகிறார். யாஷிகா திரைப்படங்கள் தவிர சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மற்றும் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு மக்கள் மற்றும் ரசிகர்களை என்டர்டெய்மெண்ட் செய்து வந்தார். மேலும் சோஷல் மீடியாவிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துவந்த யாஷிகா அப்பப்போ இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கும் பதில் அளித்து வருவார்.

இந்த நிலையில் தற்போது யாஷிகா அவரது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு திருமணம் என சொல்லி ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் அவர் கூறியது “எனது திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் வாங்கிவிட்டார்கள் இது அரேஞ்ச் மேரேஜ் தான்.

லவ் எல்லாம் எனக்கு செட்டாகாது எனவும், நான் திருமணத்திற்கு பிறகும் ரசிகர்களை என்டர்டெய்மெண்ட் செய்வேன் எனவும் கூறியிருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இருந்தாலும் இன்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் இந்த செய்தி மக்களை ஏமாற்றுவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.

yashika
yashika

Leave a Comment