பாம்பை தோளில் தூக்கிப் போட்டு சிங்கத்தை கயிறு போட்டு இழுத்த யாஷிகா ஆனந்த் வைரலாகும் வீடியோ காணொளி இதோ.!

வெள்ளித்திரையில் இருட்டுஅறையில் முரட்டுகுத்து என்ற அடல்ட் படத்தில் நடித்ததன் மூலம் தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருபவர் யாஷிகா ஆனந்த்.

இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார் அதனைத் தொடர்ந்து இருட்டுஅறையில் முரட்டுகுத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்து கொண்டே இருந்தது.

அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் பாடம்,துருவங்கள்பதினாறு போன்ற படங்களில் நடித்து வந்தார்.அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

பிக்பாஸ்க்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் இவர்  கடமையை செய்,பாம்பாட்டம்,சல்பர் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் துபாய் பார்க்கில் இருக்கும் பொழுது ஒட்டகத்திற்கு உணவு கொடுத்தது சிங்கத்தை கயிறு போட்டு இழுப்பது கரடிக்கு உணவு கொடுத்து பாம்பை தோளில் போட்டுக்கொண்டு பாம்பை தட்டி தழுவியது போன்றவற்றை செய்திருக்கிறாற் மேலும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காணொளியை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ காணொளியை பார்த்த ஒரு சில ரசிகர்கள் எம்மாம் பெரிய பாம்பை தூக்கி கழுத்தில் வைத்திருக்கிறீர்கள் உங்களுக்கு மிகவும் தைரியம் அதிகம்தான் என்று கூறி வருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version