யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்த சரண்யாவா இது.? என்ன இப்படி அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க வைரலாகும் புகைப்படம்.!

2008 ஆம் ஆண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் செல்வராகவன் கதையில் தனுஷ் நயன்தாரா, கார்த்திக் குமார், ரகுவரன், கருணாஸ், சரண்யா மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ‘யாரடி நீ மோகினி’ இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தனுஷுக்கு இந்த திரைப்படம் சினிமா திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது, மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார் அதுமட்டுமில்லாமல் டி இமான் ஒரு பாடலுக்கும், தரண் குமார் 2 பாடலுக்கும் இசையமைத்திருந்தார். அதனுடன் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி ஹிட்டடித்தது.

saranya

இந்த திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடித்த திரைப்படம் யாரடி நீ மோகினி தான் இதனை தொடர்ந்து இவர் வெண்ணிலா கபடிக்குழு, ஈரம், வேலாயுதம், ஒஸ்தி என ஒரு சில திரைப்படங்களில மட்டுமே நடித்துள்ளார்.

saranya

இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். சரண்யா ஒரு காலகட்டத்தில் நீண்டகால நண்பரான அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்.

saranya

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் சரண்யாவின் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதை பார்த்த ரசிகர்கள் யாரடி நீ மோகினி படத்தில் நடித்த சரண்யாவா இப்படி குண்டாக இருப்பது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

saranya

Leave a Comment

Exit mobile version