விக்ரம் படத்தை தொடர்ந்து வசூலில் ருத்ர தாண்டவமாடும் “யானை திரைப்படம்” – இதுவரை மட்டுமே இத்தனை கோடியா..

நடிகர் அருண் விஜய் சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் கிடைக்கின்ற வாய்ப்புகளை அனைத்தையும் சரியாக பயன்படுத்தி ஓடிக்கொண்டிருக்கிறார் இருப்பினும் அவரால் முன்னணி நடிகர்கள் என்ற அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை இதற்காக அவர் துவண்டு விடவில்லை.

தொடர்ந்து ஓடிக் கொண்டுதான் இருக்கிறார் அந்த வகையில் குற்றம் 23, தடம் ஆகிய படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் யானை இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இயக்குனர் ஹரி எடுத்து இருந்தார்.

அருண் விஜய் சூப்பராக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருந்தார். இவருடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் நடித்த அசத்தினர். படம் ஒரு வழியாக ஜூலை ஒன்றாம் தேதி திரையரங்கில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

தொடக்கத்திலிருந்து நல்ல வசூலையும் காண ஆரம்பித்தது இதுவரை படம் வெளிவந்து பத்து நாட்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே சுமார் 16 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளிவிடலாம் என படகுழு நம்பி இருக்கிறது.

இதனால் தற்பொழுது இயக்குனர் ஹரியும்  அருண் விஜய்யும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜயின் அடுத்த அடுத்த படங்கள் வெளிவர இருக்கின்றன. அந்த படங்கள் வெற்றி பெரும் பட்சத்தில் அருண் விஜயின் மார்க்கெட் மிகப்பெரிய ஒரு உச்சத்தை தொடும் என தெரிய வருகிறது

Leave a Comment