டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்ற பின் ராஜூ பேசிய வார்த்தைகள் – எமோஷ்னலான ரசிகர்கள்.

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது மக்கள் மன்றம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது யார் வின்னர் என்ற பட்டத்தை தட்டியது என்பது தான். இந்த பிக் பாஸ் சீசன் ஐந்தாவது நிகழ்ச்சி ஆரம்பித்தில் இருந்து இப்போது வரையிலும் பார்த்து வரும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தெரியும் யார் அந்த வின்னர் என்று. பிக்பாஸ் 5 வது சீசனில் வீட்டில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் 10 பெண்கள் 7 ஆண்கள் ஒரு திருநங்கை என கலந்து கொண்டனர் அனைவரும் சிறந்த பங்களிப்பை கொடுத்து அசத்தியிருந்தாலும், வாரவாரம் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டு அதில் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.

இருக்கும் ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரே மாதிரியாக மக்களை மகிழ்வித்து தனது திறமையையும் ஒருபக்கம் வெளிக்காட்டி அனைவரையும் கவர்ந்து அழைத்தவர் ராஜு. பிக்பாஸ் வீட்டில்  எப்படிப்பட்ட சண்டை வந்தாலும் அதை சமாளிக்கும் தைரியம், காமெடி, நேர்மை ஆகியவை அனைத்தும் அவரிடம் இருந்ததால் மக்களுக்கு பிடித்துப்போன நபராக மாறினார்.

பல தடவை நாமினேஷன் செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக ஓட்டுகளை வாங்கி  முதலாவதாக ராஜூ காப்பாற்றப்படுவார்.  அதிலேயே தெரிந்துவிட்டது  அவர்தான் வின்னர் என்ற செய்தி. உறுதிபடுத்தும் வகையில் இறுதி நாளை முன்னிட்டு  பிக் பாஸ் 5 வது சீசன் வின்னர் ராஜூ தான் வெற்றி பெற்றுள்ளார் என்பதை ஒரு வழியாக அடித்துக் கூறி விட்டது..

டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்ற பிறகு ராஜூ மிகவும் எமோஷனலாக பேசினார் அதில் அவர் கூறியது எதிர்நீச்சல் பாடலை ராஜூக்கு AV யாக போட அதற்கு அவர் இரண்டு வருடம் முன்பு வேறு ஒரு நடிகராக இதை  செய்தேன் தற்போது எனக்கே இந்த பாடல் ஒலிப்பது சந்தோஷம் என கூறி உள்ளார்.

Leave a Comment