மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.!

கோவை மாவட்டத்தில் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் இவரின் மனைவியின் பெயர் கல்பனா, இவர் தற்பொழுது ஏழுமாத கர்ப்பமாக இருந்துள்ளார், தர்மராஜ் அதே பகுதியில் மரம் அறுக்கும் மிஷின் வைத்துக்கொண்டு தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளார். தர்மராஜன் மனைவி தொழிற்சாலைக்கு சென்று ஊழியர்களை பார்த்துக் கொள்வது அவர்களுக்கு டீ கொண்டு செல்வது என்ற சின்ன சின்ன வேலையை செய்து வருகிறார்.

அப்பொழுதுதான் கல்பனாவிற்கு இந்தக் கொடூரமான செயல் நடந்துள்ளது கல்பனா வழக்கம்போல் மரம் அறுக்கும் ஆலைக்கு சென்றுள்ளார், அப்பொழுது எதிர்பார்க்காத விதமாக அவரின் துப்பட்டா மரம் அறுக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டது. அதனால் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டார் கல்பனா.

பின்பு கல்பனாவின் தலை துண்டாகி விழுந்தது இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கூச்சலிட்டார்கள், பின்பு தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள் அங்கு கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

கல்பனாவின் இந்த கொடூரத்திற்கு காரணம் இயந்திரத்தில் மரத்தை வெட்டும் பகுதி திறந்து வைக்கப்பட்டிருந்ததால் இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது, இந்த விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள், கர்ப்பிணி பேன் இறந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மரம் அறுக்கும் இயந்திரத்தை முறையாக வைத்திருந்தால் இதோபோல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்.

Leave a Comment