நடிப்பிலிருந்து விலகியதன் காரணத்தை கூறும் நடிகை கல்யாணி!! பாராட்டும் ரசிகர்கள்.

why Actress Kalyani quits acting reason : கல்யாணி என்கின்ற பெயரில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் நடித்து பிரபலமாக வலம் வந்தார். பின்னர் சினிமாவில் பூர்னிதா என்று தனது பெயரை மாற்றி மறந்தேன் மெய்மறந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் சின்னத்திரையில்  தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். மேலும் ஆண்டாள் அழகர், அண்ணாமலை, தாயுமானவன் போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்துகொண்டு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிப்பதிலிருந்து விலகினார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது நடிகை கல்யாணி ஏன் நடிப்பதில்லை என்பதைப்பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

இவருக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருந்து போன் செய்து உங்கள் மகள்தான் ஹீரோயின் ஆனால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என்று கூறுவார்களாம். அதற்கு அவர் அம்மா அட்ஜஸ்ட்மெண்ட் என்றால் டைம் சம்பந்தப்பட்டது என்று நினைத்து ஓகே என்று கூறுவாராம். அட்ஜஸ்ட்மெண்ட்  என்றால் வேறு பொருள் என தெரிந்து அட்ஜஸ்ட்மெண்ட் என்ற சொல்லை கேட்டாலே போனை கட் பண்ணி விடுவார்களாம். இதனால் பல வாய்ப்புகள் கைமீறி போனதாம்.

பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த போது இவரை இரவு பார்ட்டிக்கு பப்புக்கு அழைத்தனராம். இவர் போக மறுத்ததால் அந்த தொலைக்காட்சியில் பின்னர் எந்த நிகழ்ச்சிக்கும் இவரை அழைக்க வில்லையாம். இதுபோன்ற பல கசப்பான நிகழ்வுகள் இருந்ததால் சினிமாவே வேண்டாம் என ஒரு கட்டத்தில் முடிவெடுத்து ஒதுங்கி விட்டதாக கூறியிருக்கிறார்.

Leave a Comment